செய்திகள் :

குன்றத்தூர் குழந்தைகள் கொலை: தாய் அபிராமிக்கு சாகும்வரை சிறை

post image

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய, குன்றத்தூர் குழந்தைகள் கொலைச் சம்பவத்தில், தாய் அபிராமி குற்றவாளி என தீர்ப்பளித்திருந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம், அவருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அபிராமியுடன் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த மீனாட்சி சுந்தரத்துக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செம்மல் இன்று தீர்ப்பளித்திருக்கிறார்.

திருமணத்தை மீறிய உறவுக்காக, குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு கேரளா தப்பிச் செல்லவிருந்த அபிராமி - மீனாட்சி சுந்தரம் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

கடந்த 2018ஆம் ஆண்டில் சென்னை அடுத்த குன்றத்தூரில் திருமணத்தை மீறிய உறவுக்காக, இரு குழந்தைகள் கொலை செய்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம், முன்னதாக தாய் அபிராமி குற்றவாளி என தீர்ப்பளித்திருந்த நிலையில், தற்போது தண்டனை விவரங்களை வெளியிட்டுள்ளது.

பரபரப்புத் தீர்ப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த விஜய் (30) என்பவர் சென்னையில் தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவர் குடும்பத்துடன் குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை அகத்தீஸ்வரம் கோயில் தெருவில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

விஜய்க்கு அபிராமி என்ற மனைவியும், அஜய் (7) என்ற மகனும், காருனிகா (4) என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில், அந்தப் பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்து வந்த மீனாட்சி சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே, விடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரபலமாக இருந்த அபிராமி, குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்துகொடுத்துக் கொன்றுவிட்டு, காதலனுடன் தப்பிச் சென்றார்.

கேரளா தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் தலைமறைவாக இருந்த அபிராமி - மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நாகர்கோயிலில் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இறுதி வாதங்கள் நிறைவு பெற்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், அபிராமி குற்றவாளி என்றும், அவருக்கு சாகும்வரை சிறைத் தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். குற்றத்துக்கு உடந்தையாக இருந்த மீனாட்சி சுந்தரத்துக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் மனு! தங்கம் தென்னரசு அளிப்பார்!

தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குவார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும்... மேலும் பார்க்க

திருச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் இபிஎஸ்!

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(ஜூலை 26) இரவு 10.45-க்கு வரவேற்கவுள்ளார்.தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக இன்று வருகை தரும் பிரதமர் நர... மேலும் பார்க்க

கோவையில் ஒரு அபிராமி! நான்கரை வயது குழந்தையைக் கொன்ற தாய்

கோவையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த நான்கரை வயது ஆண் குழந்தையைக் கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம்... மேலும் பார்க்க

மது போதையில் நண்பர்களிடையே மோதல்: எழும்பூரில் படுகாயமடைந்த எஸ்ஐ உயிரிழப்பு!

சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: கைதானவரை அடையாளம் காட்டினாரா சிறுமி?

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சூலூர்பேட்டையில் கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தியதாகவும், அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தகவலறிந்த ... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் ஆக. 30 வரை நீட்டிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் ஆக.1 முதல் ஆக.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருச்ச... மேலும் பார்க்க