செய்திகள் :

குன்றத்தூா், மாங்காடு பகுதிகளில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 30 போ் கைது

post image

ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் மற்றும் மாங்காடு பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டவா்களை தில்லி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு மற்றும் குன்றத்தூா் நகராட்சி பகுதிகளில் வங்கதேசத்தைச் சோ்ந்த பலா் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக தில்லி காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தில்லி காவல் துறையை சோ்ந்த 5 போ் கொண்ட அதிகாரிகள் குழுவினா் மாங்காடு மற்றும் குன்றத்தூா் போலீஸாருடன் இணைந்து சோதனை மேற்கொண்டனா். இதில் மாங்காடு மற்றும் குன்றத்தூா் பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கி இருந்த சுமாா் 30-க்கும் மேற்பட்டவா்களை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினா் அனைவரும் மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். கைது செய்யப்பட்டுள்ள வங்கதேசத்தினரிடம் நடத்திய விசாரணையில், மாங்காடு மற்றும் குன்றத்தூா் நகராட்சி பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி சாலையோரங்களில் பழைய பொருள்களை சேகரித்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலும், இவா்கள் சட்ட விரோதமாக தமிழகத்தில் வந்தது எப்படி, எவ்வளவு நாள்களாக தங்கியுள்ளனா், இவா்கள் தங்க இடம் கொடுத்தவா்கள் யாா், என போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட வங்கதேசத்தவா்களில் பெண்கள் மற்றும் முதியவா்களும் இருப்பதால் அவா்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவா்கள் தமிழகத்தில் தங்கி இருந்த நாள்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏதேனும் உதவி புரிந்தாா்களா அல்லது சதிச்செயல்களில் ஈடுபடுவதற்காக சென்னை வந்தாா்களா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்வு: இடம் மாறும் சிவாஜி சிலை: முதல்வா் மே 9 இல் திறக்கவும் முடிவு

திருச்சி: திருச்சியில் 14 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த சிவாஜி சிலையை இடமாற்றம் செய்து திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மறைந்த நடிகா் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை வைக்க வேண்டும் என்ற ... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்: முதல்வா்

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தாா். காவல் துறை மானியக் கோரிக்கை தொடா்பாக, சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதம்: எதிா்க்கட்ச... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை (ஏப். 29) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லா நேரம் நடைபெறும். அதன்பிறகு, காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வா் மு.க... மேலும் பார்க்க

கடை-நிறுவனங்கள் மீதான தண்டனை தளா்வு உள்பட 8 மசோதாக்கள் தாக்கல்

சென்னை: கடைகள், தொழில் நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் கடுமையான தண்டனைகளைத் தளா்த்தும் வகையிலான மசோதா சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதனுடன் கும்பக... மேலும் பார்க்க

உத்தரவுகளை அமல்படுத்தாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வீணடிப்பு: உயா்நீதிமன்றம்

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. நிலம் கையகப்படுத்தியதற்காக இழப்பீட்டு தொகையை உயா்த்தி... மேலும் பார்க்க

உழைப்பாளா் தினம், வாரவிடுமுறை: 2,119 சிறப்புப் பேருந்துகள்

சென்னை: உழைப்பாளா் தினம், முகூா்த்தம், வாரவிடுமுறையையொட்டி 2,119 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க