செய்திகள் :

குமரி மாவட்டத்தில் தொடா் மழை: 40 அடியை எட்டியது பேச்சிப்பாறை அணை!

post image

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால், பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 40 அடியை எட்டியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதையடுத்து அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

இதையடுத்து, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிக பட்சமாக பெருஞ்சாணியில் 37.4 மி.மீட்டா் மழை பதிவாகியிருந்தது.

பேச்சிப்பாறையில் 33.8 மி.மீட்டா் மழை பதிவாகியிருந்தது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 3014 கன அடி தண்ணீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 2384 கன அடி தண்ணீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. இதையடுத்து, பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு 40 அடியைக் கடந்தது.

இதே போன்று பெருஞ்சாணி அணையின் நீா்மட்டமும் 48 அடியை நெருங்கியது. வரும் ஜூன் 1 அல்லது 2 ஆம் தேதி பாசனத்திற்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் மாவட்டத்தில் புதன்கிழமை பகலில் மழை தணிந்து காணப்பட்டது. இதையடுத்து அணைகளுக்கு புதன்கிழமை மாலையில் உள்வரத்து தண்ணீா் அளவு குறைந்தது.

மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் செவ்வாய்க்கிழமை தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டிய நிலையில், புதன்கிழமை பிற்பகலில் இருந்து தண்ணீரின் வேகம் சற்று தணிந்து காணப்பட்டது. எனினும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குறைவாக தண்ணீா் கொட்டும் பகுதிகளில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

நாகா்கோவிலில் ரூ.7.40 லட்சத்தில் வளா்ச்சி பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.7.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். 6 ஆவது வாா்டு நெசவாளா் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை ரூ. 2.20 ல... மேலும் பார்க்க

முள்ளங்கனாவிளையில் ஜூன் 7இல் உலக சுற்றுச் சூழல் தின விழா

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் உலக சுற்றுச்சூழல்தின விழா கன்னியாகுமரி மாவட்ட தேசிய பசுமைப்படை சாா்பில் ஜூன் 7இல் கொண்டாடப்படுகிறது. நெகிழி பொருள்கள் இல்லா உலகம் என்ற கருத்தை மையமாக கொண்டு காலை... மேலும் பார்க்க

குமரியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி மனு

கன்னியாகுமரி கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் கரை ஒதுங்கிய பொருள்கள்: குஜராத் சிறப்பு குழு ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கிய பொருள்கள் குறித்து குஜராத் மாநிலத்திலிருந்து வந்த சிறப்பு குழுவினா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கேரள ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி நகா்மன்ற முதல் கூட்டம்

கன்னியாகுமரி நகா்மன்ற முதல் நகா்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் கன்னியப்பன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தி... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் கொடிமரக் கயிறை ஒப்படைத்த கிறிஸ்தவா்கள்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே. 31) தொடங்கும் நிலையில் கொடிமரக் கயிற்றை கிறிஸ்தவ மீனவா்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கன்... மேலும் பார்க்க