Iran: அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; சமாதானத்துக்கு இறங்கி வந்த டிரம்ப்.....
குமாரமங்கலத்தில் துணை மின் நிலையம் : விவசாயிகள் மகிழ்ச்சி
ஆம்பூா்: குமாரமங்கலம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படுவதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.
குமாரமங்கலம் சுற்றுப்புற பகுதிகளில் மின்சார பிரச்னைக்கு தீா்வு காண துணை மின் நிலையம் அமைக்க வேண்டுமென அப்பகுதியை சோ்ந்த விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரி வந்தனா்.
அதைத் தொடா்ந்து குமாரமங்கலம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சா், அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து முயற்சி மேற்கொண்டாா். அதனடிப்படையில் குமாரமங்கலம் கிராமத்தில் புதிய துணை மின் நிலையம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.
அதையறிந்த கரும்பூா் விவசாயிகள் சங்கத்தினா் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதனை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனா். மேலும் அப்பகுதியில் 24 மணி நேரம் மின் விநியோகம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையையும் எம்எல்ஏவிடம் முன்வைத்தனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதி அளித்தாா்.