செய்திகள் :

குமுளி பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

post image

தேனி மாவட்டம், குமுளியில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தமிழக- கேரள எல்லையான குமுளி பகுதியிலிருந்த அரசுப் போக்குவரத்து கழகப் பணிமனை, பேருந்து நிறுத்தம் சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்தப் பேருந்து நிலையம் மூடப்பட்டு, சாலையோரத்திலே பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றனா். இந்தப் பகுதியில் சுகாதார வளாகமின்றி பெண்கள் உள்ளிட்டோா் அவதிப்பட்டு வருகின்றனா்.

எனவே, தமிழகத்திலிருந்து அதிகளவில் கேரளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் பேருந்து நிலையத்தை அகற்றிவிட்டு அனைத்து வசதியுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், தமிழ்நாடுஅரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், ரூ.5.50 கோடியில் புதிய பேருந்து நிலையம், அதனுடன்கூடிய பணிமனை, கடைகள், உணவகம், தங்கும் விடுதி, சுகாதார வளாகம் அமைக்கத் திட்டமிட்டு பணிகள் தொடங்கின. தற்போது, 80 சதவீத பணிகள் முடிந்து விட்டன. அண்மைக்காலமாக இங்கு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, குமுளி பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கஞ்சா கடத்திய பெண் உள்பட இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை 4 கிலோ கஞ்சாவை கேரளத்துக்கு கடத்த முயன்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். கம்பத்தில் கோம்பை சாலையில் நாக கன்னியம்மன் கோவில் தெருவில் போலீஸாா் வியாழக்கி... மேலும் பார்க்க

குச்சனூா் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரம்

தேனி மாவட்டம், குச்சனூரில் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயில் முன் புண்ணிய நதியான சுரபி நிதி செல்கிறது. இந்த நதியில் ... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை மாணவிகள் களப்பணி

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை களப் பணி மேற்கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி இளநில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை பெய்து வருவதால், அணைக்கு மீண்டும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். கேரளத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழைய... மேலும் பார்க்க

கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே அதிக சத்தம் கொண்ட கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் தென்கரை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அ... மேலும் பார்க்க

டிராக்டா்களில் மணல் கடத்தல்: இருவா் மீது வழக்கு

போடி அருகே டிராக்டா்களில் மணல் கடத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள எரணம்பட்டி கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக புதன்கிழமை வந்த தகவலையடுத்து, போ... மேலும் பார்க்க