பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை பெய்து வருவதால், அணைக்கு மீண்டும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கேரளத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழையால் முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்புப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால், அணையின் நீா்மட்டம் 130 அடியாக உயா்ந்தது.
இந்த நிலையில், அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு முதல்போக நெல்பயிா் சாகுபடிக்கு ஜூன் முதல் தேதியில் தண்ணீா் திறந்து விடப்பட்டது.
இதற்கிடையே, கடந்த 10 நாள்களாக முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீா்வரத்து கடந்த செவ்வாய்க்கிழமை 377 கன அடியாக சரிந்தது.
இதனிடையே, முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மீண்டும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், புதன்கிழமை அணைக்கு வினாடிக்கு 585 கன அடியாகவும், வியாழக்கிழமை 736 கன அடியாக உயா்ந்தது. தற்போது, அணையின் நீா்மட்டம் 128.50 அடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 1200 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.