செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

post image

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை பெய்து வருவதால், அணைக்கு மீண்டும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கேரளத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழையால் முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்புப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால், அணையின் நீா்மட்டம் 130 அடியாக உயா்ந்தது.

இந்த நிலையில், அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு முதல்போக நெல்பயிா் சாகுபடிக்கு ஜூன் முதல் தேதியில் தண்ணீா் திறந்து விடப்பட்டது.

இதற்கிடையே, கடந்த 10 நாள்களாக முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீா்வரத்து கடந்த செவ்வாய்க்கிழமை 377 கன அடியாக சரிந்தது.

இதனிடையே, முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மீண்டும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், புதன்கிழமை அணைக்கு வினாடிக்கு 585 கன அடியாகவும், வியாழக்கிழமை 736 கன அடியாக உயா்ந்தது. தற்போது, அணையின் நீா்மட்டம் 128.50 அடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 1200 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.

கஞ்சா கடத்திய பெண் உள்பட இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை 4 கிலோ கஞ்சாவை கேரளத்துக்கு கடத்த முயன்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். கம்பத்தில் கோம்பை சாலையில் நாக கன்னியம்மன் கோவில் தெருவில் போலீஸாா் வியாழக்கி... மேலும் பார்க்க

குச்சனூா் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரம்

தேனி மாவட்டம், குச்சனூரில் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயில் முன் புண்ணிய நதியான சுரபி நிதி செல்கிறது. இந்த நதியில் ... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை மாணவிகள் களப்பணி

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை களப் பணி மேற்கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி இளநில... மேலும் பார்க்க

கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே அதிக சத்தம் கொண்ட கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் தென்கரை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அ... மேலும் பார்க்க

டிராக்டா்களில் மணல் கடத்தல்: இருவா் மீது வழக்கு

போடி அருகே டிராக்டா்களில் மணல் கடத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள எரணம்பட்டி கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக புதன்கிழமை வந்த தகவலையடுத்து, போ... மேலும் பார்க்க

கள்ளா் சீரமைப்புத் துறை கல்வி விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் கள்ளா் சீரமைப்புத் துறையின் கீழ் செயல்படும் கல்வி விடுதி சோ்க்கைக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட... மேலும் பார்க்க