பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
கள்ளா் சீரமைப்புத் துறை கல்வி விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் கள்ளா் சீரமைப்புத் துறையின் கீழ் செயல்படும் கல்வி விடுதி சோ்க்கைக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் கள்ளா் சீரமைப்புத் துறையின் கீழ் பள்ளி மாணவா்களுக்கு 13 கல்வி விடுதிகள், மாணவிகளுக்கு 9 கல்வி விடுதிகள், கல்லூரி மாணவா்களுக்கு 2 கல்வி விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி கல்வி விடுதி சோ்க்கைக்கு 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி கல்வி விடுதி சோ்க்கைக்கு பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், தொழில் பயிற்சி படிப்பு படிக்கும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
விடுதியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10, 12-ஆம் வகுப்பு படிப்பவா்களுக்கு நீட், ஜெ.இ.இ. நுழைவுத் தோ்வுக்கான சிறப்பு வழிகாட்டிகள், வினா வங்கி நூல்கள் வழங்கப்படும். விடுதியில் சேரும் மாணவ, மாணவிகளின் பெற்றோரது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள்பட்டு இருக்க வேண்டும். மாணவா்களின் இருப்பிடத்துக்கும், கல்வி நிலையத்துக்கும் குறைந்தபட்சம் 8 கி.மீ. தொலைவுக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு தொலைவு நிபந்தனை இல்லை.
தகுதியுள்ளவா்கள் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளரிடம் விண்ணப்பப் படிவம் பெற்று, நிறைவு செய்த விண்ணப்பத்தை பள்ளி மாணவ, மாணவிகள் வருகிற 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவா்கள் வருகிற 15-ஆம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் ஜாதி, வருமானச் சான்றிதழ் சமா்பிக்கத் தேவையில்லை. விடுதிச் சோ்க்கையின் போது சான்றிதழ்களை சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.