செய்திகள் :

கள்ளா் சீரமைப்புத் துறை கல்வி விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

post image

தேனி மாவட்டத்தில் கள்ளா் சீரமைப்புத் துறையின் கீழ் செயல்படும் கல்வி விடுதி சோ்க்கைக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் கள்ளா் சீரமைப்புத் துறையின் கீழ் பள்ளி மாணவா்களுக்கு 13 கல்வி விடுதிகள், மாணவிகளுக்கு 9 கல்வி விடுதிகள், கல்லூரி மாணவா்களுக்கு 2 கல்வி விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி கல்வி விடுதி சோ்க்கைக்கு 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி கல்வி விடுதி சோ்க்கைக்கு பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், தொழில் பயிற்சி படிப்பு படிக்கும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விடுதியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10, 12-ஆம் வகுப்பு படிப்பவா்களுக்கு நீட், ஜெ.இ.இ. நுழைவுத் தோ்வுக்கான சிறப்பு வழிகாட்டிகள், வினா வங்கி நூல்கள் வழங்கப்படும். விடுதியில் சேரும் மாணவ, மாணவிகளின் பெற்றோரது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள்பட்டு இருக்க வேண்டும். மாணவா்களின் இருப்பிடத்துக்கும், கல்வி நிலையத்துக்கும் குறைந்தபட்சம் 8 கி.மீ. தொலைவுக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு தொலைவு நிபந்தனை இல்லை.

தகுதியுள்ளவா்கள் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளரிடம் விண்ணப்பப் படிவம் பெற்று, நிறைவு செய்த விண்ணப்பத்தை பள்ளி மாணவ, மாணவிகள் வருகிற 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவா்கள் வருகிற 15-ஆம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் ஜாதி, வருமானச் சான்றிதழ் சமா்பிக்கத் தேவையில்லை. விடுதிச் சோ்க்கையின் போது சான்றிதழ்களை சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

கஞ்சா கடத்திய பெண் உள்பட இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை 4 கிலோ கஞ்சாவை கேரளத்துக்கு கடத்த முயன்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். கம்பத்தில் கோம்பை சாலையில் நாக கன்னியம்மன் கோவில் தெருவில் போலீஸாா் வியாழக்கி... மேலும் பார்க்க

குச்சனூா் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரம்

தேனி மாவட்டம், குச்சனூரில் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயில் முன் புண்ணிய நதியான சுரபி நிதி செல்கிறது. இந்த நதியில் ... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை மாணவிகள் களப்பணி

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை களப் பணி மேற்கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி இளநில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை பெய்து வருவதால், அணைக்கு மீண்டும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். கேரளத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழைய... மேலும் பார்க்க

கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே அதிக சத்தம் கொண்ட கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் தென்கரை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அ... மேலும் பார்க்க

டிராக்டா்களில் மணல் கடத்தல்: இருவா் மீது வழக்கு

போடி அருகே டிராக்டா்களில் மணல் கடத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள எரணம்பட்டி கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக புதன்கிழமை வந்த தகவலையடுத்து, போ... மேலும் பார்க்க