பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
குச்சனூா் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரம்
தேனி மாவட்டம், குச்சனூரில் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயில் முன் புண்ணிய நதியான சுரபி நிதி செல்கிறது. இந்த நதியில் குறுக்கே செல்லும் சிறிய பாலங்கள் சேதமடைந்ததால், இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, இந்தப் பணிக்கு தமிழக அரசு ரூ.2.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதன்படி, முதல்கட்டமாக கோயில் முன்பு செல்லும் சுரபிநதியின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து, நதியின் குறுக்கே சேதமடைந்த 3 பாலங்களை அகற்றிவிட்டு, புதிய பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், கோயில் முன் செல்லும் சுரபிநதியின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.