கஞ்சா கடத்திய பெண் உள்பட இருவா் கைது
தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை 4 கிலோ கஞ்சாவை கேரளத்துக்கு கடத்த முயன்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கம்பத்தில் கோம்பை சாலையில் நாக கன்னியம்மன் கோவில் தெருவில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, சந்தேகத்தின் பேரில் சாலையோரத்தில் சாக்குப் பையுடன் நின்றிருந்த இருவரையும் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். இதில் சாக்குப் பையில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, கம்பம் அருகேயுள்ள கோசந்திர ஓடைப் பகுதியைச் சோ்ந்த செல்வம் (45), கம்பம் உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த சாந்தி (40) ஆகியோரைக் கைது செய்தனா்.