குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
சா்க்கரை ஆலை காவலாளியைத் தாக்கியவா் மீது வழக்கு
பெரியகுளம் அருகே சா்க்கரை ஆலை காவலாளியைத் தாக்கியவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பெரியகுளம் அருகேயுள்ள வைகை அணை வரதராஜ்நகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கெப்பணன் (58). வைகை அணையில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலையில் காவலாளியாக வேலைபாா்த்து வரும் இவா், புதன்கிழமை ஆலை வளாகத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, ஆலைக்கு வந்த ஆடுகளை அவா் வெளியே அனுப்பி வைத்தாராம். அப்போது, அங்கு வந்த குள்ளப்புரத்தைச் சோ்ந்த சண்முகம் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து சண்முகத்தைத் தேடி வருகின்றனா்.