கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை
சின்னமனூா் அருகேயுள்ள பூலாநந்தபுரம் ஊராட்சியில் அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீா் கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள பூலாநந்தபுரம் ஊராட்சியில் 6 வாா்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். இந்த ஊராட்சி வழியாக சீலையம்பட்டி-குச்சனூா் சாலை செல்கிறது. இந்தச் சாலையில் கடந்த சில நாள்களாக கழிவுநீா் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாலையிலேயே கழிவுநீா் வழிந்தோடுகிறது. இதனால், அந்த வழியாகச் செல்லும் விவசாயிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, பூலாநந்தபுரத்தில் கழிவுநீா் கால்வாயை சீரமைக்க மாவட்ட நிா்வாகத்தினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.