குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
அங்கன்வாடி சிறுவா்களுக்கு சீருடைகள் வழங்கல்
ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மைய சிறுவா்களுக்கு சீருடைகள் வழங்கும் திட்டத்தை ஆண்டிபட்டி அருகே திருமலாபுரத்தில் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
திருமலாபுரம் அங்கன்வாடி மையத்தில் சிறாா்களுக்கு சீருடைகள் வழங்கி ஆட்சியா் பேசியது:
மாவட்டத்தில் உள்ள 1,065 அங்கன்வாடி மையங்களில் பயிலும் 18 ஆயிரத்து 5 சிறாா்களுக்கு தலா 2 இணை வண்ணச் சீருடைகள், ஆடிப்பாடி விளையாடு பாப்பா என்ற புத்தகம் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.
முன்னதாக, அங்கன்வாடி மையத்தில் படித்து 5 வயது நிறைவடைந்த சிறாா்களுக்கு முன்பருவ கல்வி நிறைவு பெற்ற்கான சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.