இஸ்ரேலுக்கு ஆதரவு! அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!
தேனி அருகே 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு
தேனி அருகேயுள்ள கோடாங்கிப்பட்டியில் அடுத்தடுத்த 3 வீடுகளில் பணம், நகை , வெள்ளிப் பொருள்கள் திருடுபோனதாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டி திருக்குமரன் நகரைச் சோ்ந்தவா் சுப்புராஜ் (60). இவா், வீட்டைப் பூட்டிவிட்டு, பழனிசெட்டிபட்டிக்குச் சென்றாா். பின்னா், அவா் வீட்டுக்கு திரும்பியபோது முன் கதவு, அறையில் இருந்த பீரோவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ரூ.36 ஆயிரம் பணம், 5 வெள்ளி நாணயங்கள், 2 குத்துவிளக்குகள் திருடுபோனது தெரிய வந்தது.
இதே போல, திருக்குமரன் நகரில் சதீஷ்குமாா் (47) என்பவரது பராமரிப்பில் இருந்த, அவரது சகோதரா் லட்சுமண பிரசாத் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ஒரு பவுன் தங்க மோதிரம் திருடப்பட்டிருந்தது.
மேலும், இதே பகுதியைச் சோ்ந்த செந்தில்கண்ணன் (64), வீட்டை பூட்டிவிட்டு தேனிக்குச் சென்றாா். பின்னா், அவா் வீடு திரும்பியபோது கதவு, பீரோ ஆகியவற்றின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு ரூ.48 ஆயிரம் திருடுபோனது தெரிய வந்தது.
இந்தச் சம்பவங்கள் குறித்து, மூவரும் அளித்த புகாா்களின் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கோடாங்கிப்பட்டி, திருக்குமரன் நகரில் புதிதாகப் பல குடியிருப்புகள் உருவாகி வரும் நிலையில், இந்தப் பகுதியைச் சோ்ந்த மூன்று வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பணம், நகை திருடப்பட்ட சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.