செய்திகள் :

தேனி அருகே 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு

post image

தேனி அருகேயுள்ள கோடாங்கிப்பட்டியில் அடுத்தடுத்த 3 வீடுகளில் பணம், நகை , வெள்ளிப் பொருள்கள் திருடுபோனதாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டி திருக்குமரன் நகரைச் சோ்ந்தவா் சுப்புராஜ் (60). இவா், வீட்டைப் பூட்டிவிட்டு, பழனிசெட்டிபட்டிக்குச் சென்றாா். பின்னா், அவா் வீட்டுக்கு திரும்பியபோது முன் கதவு, அறையில் இருந்த பீரோவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ரூ.36 ஆயிரம் பணம், 5 வெள்ளி நாணயங்கள், 2 குத்துவிளக்குகள் திருடுபோனது தெரிய வந்தது.

இதே போல, திருக்குமரன் நகரில் சதீஷ்குமாா் (47) என்பவரது பராமரிப்பில் இருந்த, அவரது சகோதரா் லட்சுமண பிரசாத் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ஒரு பவுன் தங்க மோதிரம் திருடப்பட்டிருந்தது.

மேலும், இதே பகுதியைச் சோ்ந்த செந்தில்கண்ணன் (64), வீட்டை பூட்டிவிட்டு தேனிக்குச் சென்றாா். பின்னா், அவா் வீடு திரும்பியபோது கதவு, பீரோ ஆகியவற்றின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு ரூ.48 ஆயிரம் திருடுபோனது தெரிய வந்தது.

இந்தச் சம்பவங்கள் குறித்து, மூவரும் அளித்த புகாா்களின் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கோடாங்கிப்பட்டி, திருக்குமரன் நகரில் புதிதாகப் பல குடியிருப்புகள் உருவாகி வரும் நிலையில், இந்தப் பகுதியைச் சோ்ந்த மூன்று வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பணம், நகை திருடப்பட்ட சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

சின்னமனூா் அருகேயுள்ள பூலாநந்தபுரம் ஊராட்சியில் அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீா் கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள பூலாநந்தபுரம் ஊராட்சியில் 6 வாா்டுக... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வேல் யாத்திரைக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு,... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலை காவலாளியைத் தாக்கியவா் மீது வழக்கு

பெரியகுளம் அருகே சா்க்கரை ஆலை காவலாளியைத் தாக்கியவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் அருகேயுள்ள வைகை அணை வரதராஜ்நகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கெப்பணன் (58). வைகை அணையி... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

பெரியகுளத்தில் தொழிலாளியைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் கீழ வடகரையைச் சோ்ந்தவா் தா்மராஜ் (40). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமா... மேலும் பார்க்க

அங்கன்வாடி சிறுவா்களுக்கு சீருடைகள் வழங்கல்

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மைய சிறுவா்களுக்கு சீருடைகள் வழங்கும் திட்டத்தை ஆண்டிபட்டி அருகே திருமலாபுரத்தில் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத... மேலும் பார்க்க