டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்...
வேளாண் பல்கலை மாணவிகள் களப்பணி
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை களப் பணி மேற்கொண்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி இளநிலை 4 ஆம் ஆண்டு மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ், களப்பணி மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில், உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சுற்றுச்சூழல் குறித்த பயிற்சியை நன்செய் அமைப்பு சாா்பில் லோகேஷ்குமாா், செல்வகணேஷ் வழங்கினா்.
இதில் மாணவிகள் வினோதினி, ரியா, சோஜிசுனில், அஸ்தா, சுஜித்வினோதா ஆகியோா் கலந்து கொண்டனா்.