செய்திகள் :

கும்பகோணம்: கொலை வழக்கில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

post image

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன்(29). இவர் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் லோடுமேனாக இருந்து வந்தார். மேலும் அங்கு கேன்டீன் ஒன்றையும் நடத்தி வந்தார். இதனால் இவரை அப்பகுதியினர் கேன்டீன் செந்தில் என்றே அழைத்து வந்தனர். இந்நிலையில், தாராசுரம், அனுமார்கோவில் தெருவைச் சேர்ந்த லெட்சுமணனுக்கும், செந்தில்நாதனுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் காரணமாக தகராறு ஏற்பட்டு முன்விரேதமாக மாறியது.

murder
murder

இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி, லெட்சுமணன், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களான தாராசுரம் பகுதியைச் சேர்ந்த ராமர், திருநாவுக்கரசு, விக்னேஷ், இளங்கோவன், மூர்த்தி, மதுரை செல்லுரை சேர்ந்த பாண்டி, கார்த்திக், கொரநாட்டுகருப்பூரை சேர்ந்த கார்த்திக் ஆகிய ஒன்பது பேரும் சேர்ந்து தாராசுரம் காய்கறி மார்கெட் முன்பு செந்தில்நாதனை வெட்டிக்கொலை செய்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து கும்பகோணம் தாலுக்கா போலீஸார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் லெட்சுமணன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். ராமர் தலைமறைவாகி விட்டார். அவர் எங்கு இருக்கிறார் என தெரியாத நிலையில் போலீஸார் அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

தீர்ப்பு

வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, கொலை வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, விக்னேஷ், இளங்கோவன், பாண்டி ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.3,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், மதுரையை சேர்ந்த கார்த்திக், கொரநாட்டுகருப்பூரை சேர்ந்த கார்த்திக், தாராசுரம் மூர்த்தியை சேர்ந்த மூவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கொலை வழக்கில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

சென்னை: `உனக்கு உன் மனைவி செய்வினை வைத்திருக்கிறாள்' - டெலிவரி ஊழியரை ஏமாற்றிய பெண்

சென்னை ஓட்டேரி, பாஷ்யம் 2-வது தெருவில் வசித்து வருபவர் அக்பர் (33). இவர் சிக்கன் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இந்தச் சூழலில் அக்பர் தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ஆச... மேலும் பார்க்க

``பள்ளி ஆசிரியர்கள் கையில் சிறு கம்பு வைத்திருக்க வேண்டும்'' - கேரள ஐகோர்ட் கருத்து

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் கம்பால் அடித்ததாக மாணவனின் பெற்றோர் அளித்த புகாரால், விழிஞ்ஞம் போலீஸார் வழக... மேலும் பார்க்க

உ.பி: ரமலான் நோன்பு தொடங்க காத்திருந்த இளைஞர் சுட்டுக் கொலை... போலீஸ் விசாரணை!

உத்தரப்பிரதேச மாநிலம், அலிகர் என்ற இடத்தைச் சேர்ந்த ஹாரீஸ் என்ற கட்டா என்பவர் தனது வீட்டிற்கு வெளியில் அதிகாலை 3.15 மணிக்கு நின்று கொண்டிருந்தார். அவர் முன்னதாக கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்திருந்தார்... மேலும் பார்க்க

PWD: `ரூ.1.50 லட்சம் கையாடல்' - 40 ஆண்டுகள் கழித்து பொதுப்பணித்துறை அதிகாரிக்கு தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம், மூட்டம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆரணி குளத்தில் கடந்த 1984-85 -ஆம் ஆண்டில் கலிங்கு வெட்டியதில் ரூ.1,51,000 கையாடல் செய்ததாக கடந்த 1987 -ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால... மேலும் பார்க்க

சென்னை: மதியம் அடிதடி; இரவில் கொலை - இளைஞரைக் கொலை செய்த ரௌடியின் பின்னணி

சென்னை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரின் மனைவி ஜெயந்தி. ராஜா தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை, பாரதியார் தெரு சந்திப்பு பகுதியில் நேற்று நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மூன்ற... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: பள்ளிக்குச் சென்ற 3-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை - போக்சோவில் இளைஞர் கைது!

தஞ்சாவூர், வல்லம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (30). இவர் கடந்த 11-ம் தேதி தனது டூவீலரில் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் சாலையோரத்தில், பள்ளிக்கு செல்வதற்காக மூன்றாம் வகுப்பு படிக... மேலும் பார்க்க