செய்திகள் :

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களில் 5 மத்தியப் பிரதேச பக்தர்கள்!

post image

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்துவரும் மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை புனித நீராடலின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 30 பேரில் ஐந்து பேர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார்.

திரிவேணி சங்கமத்தில் அகாடா துறவிகள் புனித நீராடுவதற்கான இடத்தில் காவல்துறையின் தடுப்புகளை அத்துமீறிய பக்தர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர்.

ஜப்பானில் நான்கு நாள் சுற்றுப்பணத்தில் உள்ளார் முதல்வர் மோகன் யாதவ். கும்பமேளா தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் நடந்த வேதனையான சம்பவத்தில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பக்தர்களின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐந்து பக்தர்களின் மரணம் மிகுந்த வேதனையளிக்கின்றது. இறந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் வழங்கப்படும் நிதியுதவியை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்துமாறு உத்தரவிடுகிறேன்.

இந்த துயரமான நேரத்தில், துயரமடைந்த குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது என்று அவர் பதிவில் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் ஒரு பெண் மற்றும் ஆண் என அடையாளம் காணப்பட்ட நிலையில், ஹுகும் பாய் லோதி என்ற பெண் சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அந்த நபர் ரைசன் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்லால் அஹிர்வார் என்றும் அடையாளம் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வர் ஐந்து பேர் இறந்ததை உறுதிப்படுத்தியிருந்தாலும், மேலும் மூன்று பேர் பற்றிய விவரங்கள் போபாலில் உள்ள அதிகாரிகளிடம் இன்னும் கிடைக்கவில்லை.

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித... மேலும் பார்க்க

ஐஐடி-களில் தொடா்கதையாகும் மாணவா் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை: உச்சநீதிமன்றம் உறுதி

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஐஐடி உள்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 5 ஹிஸ்புல் பயங்கரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீா் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 5 பேரின் அசையாத சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ராம்பன் மாவட்டத்தைச் சோ்ந்த சராஜ்த... மேலும் பார்க்க

ஆந்திர பட்ஜெட்டில் பண மழை! மாணவா்களுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500

ஆந்திரத்தில் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச பேருந்து பயணம் உள்ளி... மேலும் பார்க்க

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: உலக வங்கி

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளா்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த இலக்கை அடைய நிதித்துறை மட்டுமின்றி நிலம் மற்றும் தொழிலாளா் ... மேலும் பார்க்க

ஜம்முவில் தொடா் மழை: இருவா் உயிரிழப்பு

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனா். ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன. உதம்பூா் மாவட்டத்... மேலும் பார்க்க