செய்திகள் :

கும்பமேளா பயணிகள் பேருந்து விபத்து: 30 பேர் காயம்!

post image

மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு திரும்பிய பேருந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தகத்கரில் உள்ள கோசெலாவ் பகுதியைச் சேர்ந்த பயணிகள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பஞ்சாப் செல்லும் சாலையில் பேருந்தின் பிரேக் கோளாறு ஏற்பட்ட நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.

பேருந்தில் 46 பயணிகள் இருந்தனர். அதில் 30 பேர் காயமடைந்த நிலையில், மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அனைவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

தகவல் கிடைத்ததும், சார்புஜா காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சார்புஜா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றன.

காயமடைந்தவர்களில் 18 பேர் சார்புஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இருவர் உயர் மருத்துவச் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். லேசான காயங்களுடன் இருந்த எட்டு பேர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.

பலத்த காயமடைந்தவர்களில் அமித் குமாரின் மகன் 10 வயது ஓம் என்பவரும், இந்த விபத்தில் அவர் கையை இழந்துள்ளார். காயமடைந்த மற்ற பயணிகளில் ஆஷிகா, தமன்னா, மதுரா பென், போமராம், சுமர்சிங், பார்வதி, சங்கீதா, ஃபல்குனி, ஜோதி, ராஜுபாய், நிலன், பிராச்சி, பவேஷ், பியாரி தேவி, டக்கு தேவி, நிமித், ஜஷோதா மற்றும் மூலி தேவி ஆகியோர் அடங்குவர்.

சம்பவத்திற்குப் பிறகு கும்பல்கர் துணை காவல் கண்காணிப்பாளர் ஞானேந்திர சிங் மற்றும் அவரது குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

மாகி பௌர்ணமி: சங்கமத்தில் 1.60 கோடி பேர் புனித நீராடல்!

மாகி பௌர்ணமியை முன்னிட்டு பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கிட்டத்தட்ட 1.60 கோடி பேர் புனித நீராடியதாக மாநில அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைப... மேலும் பார்க்க

இலவசங்களால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை: உச்ச நீதிமன்றம்!

தேர்தலுக்கு முன்பு கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நகர்ப்புறங்களில் வீடற்றவர்கள் தங்குவதற்கான உரிமை தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியிடமிருந்து விடுதலை பெற விரும்பும் பஞ்சாப்: பாஜக

பஞ்சாப் விரைவில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து விடுதலை பெறும் என பாஜக தலைவர் துஷ்யந்த் கௌதம் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆங்கில ஊடகத் தளமான ஏஎன்ஐ-க்கு அவர் அளித்த பேட்டியில், பஞ்சாப் மக்கள் தாங்கள் ஏமாற்றப... மேலும் பார்க்க

ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டிய சரத் பவாருக்கு சிவசேனா எதிர்ப்பு!

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டியதற்கு சிவசேனா புதன்கிழமை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தி... மேலும் பார்க்க

மும்பையில் ஜிபிஎஸ் நோய்க்கு முதல் பலி!

மும்பையில் ஜிபிஎஸ் நோய்த் தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். இது மும்பையில் பதிவான முதல் இறப்பாகும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புணேவில் சமீபத்தில் ஜிபிஎஸ் என அழைக்கப்படும் கிலான் பாரே ச... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் காதலியுடன் தற்கொலை முயற்சி!

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர், தனது காதலியுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் காதலி உயிரிழந்த நிலையில், இளைஞர் உயிருக்குப் போராடி வருகிறார். மேலும் பார்க்க