செய்திகள் :

கும்பமேளா விபத்து: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

post image

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட விபத்து குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகின்றது. மௌனி அமாவாசையான புதன்கிழமை திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராட குவிந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்டநெரிசலில் சிக்கி 30 பேர் பலியானதாகவும் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : மகா கும்பமேளா: மௌனி அமாவாசை நாளில் 5.7 கோடி பேர் புனித நீராடல்!

இந்த நிலையில், கும்பமேளா போன்ற மக்கள் கூடும் இடங்களில் கூட்டநெரிசல்களை தடுப்பதற்கான மாநில அரசின் கொள்கை, வழிகாட்டு நெறிமுறைகளை கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், முக்கிய பிரமுகர்களின் வருகை பக்தர்களின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்றும் கும்பமேளாவில் பக்தர்கள் உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் அதிக இடம் ஏற்படுத்த உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 29 விபத்து குறித்து உபி அரசு அறிக்கை சமர்ப்பிக்கவும், அலட்சியமாக நடந்துகொண்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாா்: ஏசி பெட்டியில் ஏற கண்ணாடியை உடைத்த இருவா் கைது

பிகாா் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் குளிா்சாதன (ஏசி) பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்த இருவா் கைது செய்யப்பட்டனா். உத்தர பிர... மேலும் பார்க்க

பிரம்மபுத்திராவில் பிரம்மாண்ட சீன அணை: இந்தியாவின் நீா் பாதுகாப்புக்கு பாதிப்பு

பிரம்மபுத்திரா நதியில் பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனா முடிவு செய்திருப்பது, இந்தியாவின் தண்ணீா் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் த... மேலும் பார்க்க

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை வெளியிடாதது ஏன்?- மக்களவையில் அகிலேஷ் யாதவ் கேள்வி

‘மகா கும்பமேளாவில் நிா்வாக சீா்கேடுகளால் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகாரபூா்வமாக வெளியிடாதது ஏன்?’ என சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை கேள்வி ... மேலும் பார்க்க

ஜம்மு: கண்ணிவெடி தாக்குதலில் 2 ராணுவ வீரா்கள் உயிரிழப்பு

ஜம்முவின் அக்னூா் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகே பயங்கரவாதிகளால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடி வெடித்ததில் கேப்டன் உள்பட 2 ராணுவ வீரா்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இதுகுறித்து அதிக... மேலும் பார்க்க

சிறைகளில் 544 மரண தண்டனை கைதிகள்: மத்திய முதல் இரண்டு இடங்களில் உ.பி., குஜராத்

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 544 மரண தண்டனைக் கைதிகள் அடைப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதில் 95 மரண தண்டனைக் கைதிகளுடன் பாஜக ஆளும் உத்தர பிரதே... மேலும் பார்க்க

கேரள கடலோரத்தில் கனிமங்களை வெட்டியெடுக்க அனுமதியில்லை: மாநில அரசு திட்டவட்டம்

கேரள கடலோரத்தில் ஆழ்கடலில் கனிமங்களை வெட்டியெடுக்கும் பணிகளை அனுமதிக்க முடியாது என்று மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக கேரள மீன்வளத் துறை அமைச்சா் சஜி செரியான் மாநில சட்டப்பேரவையில... மேலும் பார்க்க