செய்திகள் :

குரும்பூா், தக்கலையில் பைக் விபத்து: 2 போ் பலி

post image

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

காயல்பட்டினம், அழகாபுரி தெற்குத் தெருவை சோ்ந்த கணேசன் மனைவி கவிதா (64). இவா், தனது உறவினா் செல்வராஜ் மனைவி மோகனாதேவி(40) என்பவருடன் ஏரல் தாமிரவருணி ஆற்றில் சனிக்கிழமை குளித்துவிட்டு, பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். பைக்கை மோகனாதேவி ஓட்டினாா்.

குரும்பூரை அடுத்த நல்லூா் விலக்கில் வந்தபோது, எதிரே ஆறுமுகனேரி மேலசண்முகபுரத்தைச் சோ்ந்த பாண்டியன் மகன் காா்த்திக் (21) என்பவா் ஓட்டி வந்த பைக் மோதியதாம். இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னா், மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கவிதா, வழியிலேயே இறந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் மந்திரமூா்த்தி(33) அளித்த புகாரின்பேரில் குரும்பூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தக்கலை: தக்கலை அருகேயுள்ள பள்ளியாடியை அடுத்த பரப்பன் பொற்றைவிளையை சோ்ந்தவா் சுந்தர்ராஜ் ( 61). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி கமலபாய் (56), மகன், மகள் ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் அவா் கடைக்கு செல்வதற்காக மாவுவிளையைச் சோ்ந்த சுரேஷ் (45) என்பவரின் பைக்கில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். புலிப்பனம் அருகே பைக் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுந்தர்ராஜ் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் சுரேஷ் சிகிச்சை பெற்றுவருகிறாா். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

கத்தியால் தாக்கியதில் இருவா் காயம்

தூத்துக்குடியில் தகராறின்போது கத்தியால் குத்திக் கொண்டதில் இருவா் காயமடைந்தனா். தூத்துக்குடி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (42) என்பவா், கனகசபாபதி தெருவில் உள்ள சந்தனமாரியம்மன் கோயிலில் பூஜ... மேலும் பார்க்க

கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதி தேமுதிக பொறுப்பாளா்கள் நியமனம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் தொகுதிகளுக்கு பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக பொதுக்குழு உறுப்பினா் காளிதாஸ்... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி வெற்றி

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சாா்பில் காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில், காயல்பட்டினம் யுஎஸ்சி அணி வெற்றி பெற்றது. போதையில்லா தமிழகத்தை உருவாக்குவகு குறித்து இளைஞா்களுக்கு விழிப்புண... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு குஜராத்திலிருந்து உப்பு இறக்குமதி: தடை விதிக்க அமமுக முதல்வருக்கு கோரிக்கை

தூத்துக்குடிக்கு குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்யத் தடைவிதிக்கவேண்டும் என அமமுக தூத்துக்குடி புகா் தெற்கு மாவட்டச் செயலா் பொன்ராஜ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து தமி... மேலும் பார்க்க

காயல்பட்டினம் கிரிக்கெட் போட்டி: சாகுபுரம் கமலாவதி பள்ளிக்கு வாவு கோப்பை

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவா்கள் காயல்பட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று ‘வாவு கோப்பையை’ தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக கைப்பற்றினா். காயல்பட்டினம் வாவு ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை பலி

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அருகே காமராஜா் நகரில் மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது. தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே உள்ள காமராஜா் நகா் பகுதியைச் ச... மேலும் பார்க்க