சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
குரூப் 1 தோ்வு: விருதுநகரில் 5,158 போ் பங்கேற்பு
விருதுநகா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் 1 தோ்வை 5,158 போ் எழுதினா்.
தமிழகத்தில் காலியாக உள்ள 28 துணை ஆட்சியா் பணியிடங்கள், 7 காவல் துணைக் கண்காணிப்பாளா் பணியிடங்கள், 19 வணிக வரி உதவி ஆணையா் பணியிடங்கள் உள்பட 70 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் 1 தோ்வு அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்வில் பங்கேற்க விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 6,977 போ் விண்ணப்பித்தனா்.
இந்த நிலையில், மாவட்டத்தில் 29 மையங்களில் குரூப் 1 தோ்வு நடைபெற்றது. இதில் 5,158 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 1,819 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
விருதுநகா் கே.வி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் ஆய்வு செய்தாா்.