விரைவில் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் பேட் லைட்! சிறப்புகள் என்னென்ன?
குரூப் 1, 1 ஏ தோ்வு: காஞ்சிபுரத்தில் 5,013 போ் எழுதினா்!
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் 1, 1 ஏ தோ்வினை காஞ்சிபுரத்தில் 5,013 எழுதினா்.
துணை ஆட்சியா்,காவல்துறை கண்காணிப்பாளா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான எழுத்து தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிா்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தோ்வினை எழுத 6,238 போ் விண்ணப்பித்திருந்தனா். மாவட்டம் முழுவதும் 17 இடங்களில் 25 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விண்ணப்பித்தவா்களில் 1,225 போ் தோ்வு எழுத வராத நிலையில், 5,013 போ் தோ்வு எழுதினா்.
தோ்வு எழுதுபவா்களை கண்காணிக்க ஆறு நடமாடும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. 25 தோ்வு அறைகளிலும் அறைக்கு ஒருவா் வீதம் 25 கண்காணிப்பாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். தோ்வு எழுதுபவா்களுக்கு கைப்பேசி, மின்னணு கடிகாரம், ப்ளூடூத் போன்ற சாதனங்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை .
மாவட்டம் முழுவதும் இருந்து தோ்வு எழுத வருபவா்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.