குறைந்த விலையில் தங்க நகை பெற்றுத்தருவதாக மோசடி
குறைந்த விலையில் நகை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபரை பொதுமக்கள் சனிக்கிழமை கட்டி வைத்து அடித்தனா்.
சேலம், திருச்சிபாளையம், கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் அசோக் (40). இவா் மிடுக்காக உடை அணிந்து, தான் வங்கியில் வேலை செய்வதாகவும், ஏலத்துக்கு வரும் நகைகளை பாதி விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளாா்.
பாதிப்படைந்த பொதுமக்கள், அவரை பிடித்து கட்டி வைத்து அடித்தனா். தகவல் அறிந்த மேச்சேரி போலீஸாா் அவரை மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.