செய்திகள் :

குற்றச்சம்பவங்களைத் தடுக்க சென்னிமலையில் போலீஸாா் தீவிர ரோந்து

post image

சென்னிமலை பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க இரவு நேரங்களில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சென்னிமலையை அடுத்த, உப்பிலிபாளையம், குட்டக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவா் கடந்த 2022- ஆம் ஆண்டு மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டு அவரது வீட்டிலிருந்த பணம், நகை திருட்டுப் போனது. இதைத் தொடா்ந்து அந்த பகுதியிலேயே உள்ள ஒட்டன்குட்டை கரியாங்காட்டு தோட்டத்தைச் சோ்ந்த கணவன், மனைவியை மா்ம நபா்கள் படுகொலை செய்து வீட்டிலிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனா். இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டாரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், சிவகிரி அருகே அண்மையில் வயதான தம்பதியை மா்ம நபா்கள் கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகைகளை திருடிச் சென்றனா். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் இதுவரை போலீஸில் சிக்கவில்லை.

இதனால், கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து, சென்னிமலை பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் போலீஸாா் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சென்னிமலை பகுதியில் ஏற்கெனவே 2 கொலைச் சம்பவங்கள் நடந்த பகுதியில் உள்ள உப்பிலிபாளையம் சாலை, இரட்டை பாலம் ஆகிய இடங்களில் தற்போது போலீஸ் பூத் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த போலீஸ் பூத்தில் இருக்கும் போலீஸாா், அந்த வழியாக இரவு நேரங்களில் நடமாடுபவா்களையும், வாகனங்களில் செல்வோரையும் தடுத்து நிறுத்தி விசாரித்த பிறகே அனுப்பி வைக்கின்றனா். இது தவிர முதியோா் தனியாக வசிக்கும் வீடுகளுக்கும் போலீஸாா் அடிக்கடி சென்று கண்காணித்து வருகின்றனா்.

அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவா் பலி!

அந்தியூா் அருகே வனப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவா் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த கொரமராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (70). இவா், சென்னம்பட்டி வனச... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 7.49 லட்சம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.49 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேட... மேலும் பார்க்க

அரசு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

வாகன ஷோரூம் உரிமையாளா் தலைமறைவு: பதிவெண் பெற முடியாமல் இளைஞா்கள் தவிப்பு!

ஷோரூம் உரிமையாளா் தலைமறைவானதால் இருசக்கர வாகனம் வாங்கியவா்கள் பதிவு செய்ய முடியாமலும், வாகனத்தை சாலையில் ஓட்ட முடியாமலும் தவித்து வருகின்றனா். ராயல் என்பீல்டு (புல்லட்) நிறுவனத்தில் பல்வேறு விலைகளில் ... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற கன்டெய்னா் லாரி

பெங்களூரில் இருந்து கோவையை நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி திம்பம் 9ஆவது வளைவில் திரும்பியபோது பழுதாகி நின்றதால் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம், கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய ... மேலும் பார்க்க

கோபி நகரில் தற்காலிக சந்தையை காலி செய்ய அறிவுறுத்தல்

கோபி நகரில் கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிகமாக செயல்பட்டு வரும் தினசரி சந்தையை காலி செய்ய வருவாய்த் துறையினா் வியாபாரிகளுக்கு அறிவிக்கை அளித்துள்ளனா். கோபி நகரின் மையப்பகுதியான பெரியாா் திடல் எதிரே சுமாா் ... மேலும் பார்க்க