செய்திகள் :

குற்றவாளி என தீர்ப்பு! நீதிமன்றத்தில் தனித்துவிடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

post image

எப்போதும் தொண்டர் படைசூழ, பாதுகாவலர்களின் உதவியோடு வெளியே வரும் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, நேற்று நீதிமன்றத்தில் தனியாகவே காணப்பட்டார்.

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை விடியோ எடுத்து மிரட்டியதாகத் தொடரப்பட்ட பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

மிகப்பெரிய அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், பிரஜ்வல் ரேவண்ணா, எப்போதும் ஆதரவாளர்களின் புடைசூழ வெளியே வருவார். ஆனால், நேற்று நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்கூட அவருடன் இல்லை.

தனது இக்கட்டான நாள்களை, பிரஜ்வல் ரேவண்ணா தனியாகவே சந்திக்கவிருக்கிறார். நீல நிற சட்டை, ஜீன்ஸ் பேண்டுடன் நீதிமன்றத்துக்கு தனியாக வந்திருந்த பிரஜ்வல் ரேவண்ணா, தனது வழக்குரைஞர்களிடம் எந்தவிதமான தீர்ப்பு வரும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

பிறகு, நீதிபதி தீர்ப்பை வாசித்தபோது, பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி, அவருக்கான தண்டனை விவரங்களை நாளை அறிவிக்கிறேன் என்றார்.

இதைக் கேட்டதும் பிரஜ்வல் ரேவண்ணாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரது முகம் முழுக்க வேதனையால் துவண்டது. தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டார். பிறகு தன்னுடைய கைகளால் முகத்தை மூடிக்கொண்டார். கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீரை அடக்கிக்கொண்டு வெளியே வந்தார். அப்போது அவருடன் குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் கூட இல்லை என்பதை அங்கிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று வழக்குரைஞர்கள் பிரஜ்வல் ரேவண்ணாவைத் தேற்றிக் கொண்டிருந்தனர். இந்த தீர்ப்பைக் கேட்டு கட்சித் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு அரசியல் தலைவர் தொடர்புடைய வழக்கில், இவ்வளவு விரைவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

ஒடிஸாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்ட சிறுமி, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெ... மேலும் பார்க்க

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாக சந்தேகமடைந்த கணவன் விரக்தியில் தன் இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் சூரத்தில் ஆசிரியர... மேலும் பார்க்க

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம் இருப்பதையடுத்து வெளியூர்களுக்குச் செல்ல மக்கள் அதிகம் பேர் விரும்புவதால் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.ஆகஸ்ட்டில், குறிப்பிட்ட சில உள்ளூர் விமான சேவைகளின... மேலும் பார்க்க

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஆக. 2) பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைய... மேலும் பார்க்க

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

பஞ்சாபில் நகையை பறித்து தப்பிச்சென்ற கொள்ளையர்களின் இருசக்கர வாகனம், கார் மீது மோதியதில் 12 வயது சிறுவன் பலியானான். பஞ்சாப் மாநிலம், பட்டி சுரா சிங் கிராமத்தைச் அமன்தீப் கௌர் மற்றும் அவரது கணவர் ரஞ்சி... மேலும் பார்க்க

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் ரோஹித் சின்ஹா. இவர் சனிக்... மேலும் பார்க்க