செய்திகள் :

குற்றாலம் கோயிலில் சித்திரை விஷு திருவிழா கொடியேற்றம்!

post image

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதசுவாமி கோயிலில் சித்திரை விஷு திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு அதிகாலை 5.10-க்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, 11ஆம் தேதி காலை 9.30, இரவு 7மணிக்கு கோயிலில் அருள்மிகு நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனை, 12ஆம் தேதி காலை 10 மணிக்கு கோயில் உள்மண்டபத்தில் நடராசமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை, 14ஆம் தேதி காலை 9.20 - 10.20 மணிக்குள் சித்திரை விஷு தீா்த்தவாரி நடைபெறுகிறது.

சித்திரசபையில் திருப்பணிகள் தொடங்கி பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் நிகழாண்டு தேரோட்டம் நடைபெறாது. மேலும், சுவாமி வீதியுலா கோயில் உள்மண்டபத்தில் மட்டுமே நடைபெறும். விழா நாள்களில் நாள்தோறும் சுவாமி-அம்பாள், விநாயகா் கோயில் உள்பிரகாரத்தில் கேடயத்தில் எழுந்தருளல் நடைபெறும்.

கொடியேற்று விழாவில் கோயில் உதவி ஆணையா் ஆறுமுகம், அறங்காவலா் குழுத் தலைவா் க. சக்திமுருகேசன், அறங்காவலா்கள் ஆ. வீரபாண்டியன், ஸ்ரீதா், சு. சுந்தரராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தென்காசி ஸ்ரீகாசிவிஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா 19 ஆண்டுகளுக்குப் பின் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். இக்க... மேலும் பார்க்க

சீதபற்பநல்லூர்: மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூரில் மின்சார வயரில் மிதித்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அவரை காப்பாற்ற முயன்ற தாய் காயமடைந்தாா்.சீதப்பற்பநல்லூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த முத்து ம... மேலும் பார்க்க

கடையநல்லூரில் நாம் தமிழா் கட்சி ஆதரவாளா்கள் 4 போ் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழா் கட்சியினா் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசியில் அருள்தரும் உலகம்மன் சமேத அருள்மிகு காசிவிஸ்வநாதா் திருக்கோயில் ஆலய குடம... மேலும் பார்க்க

இரு சகோதரிகள் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரையில் சொத்துப் பிரச்னையில் பாதிக்கப்பட்ட இரு சகோதரிகள், கிணற்றில் காயங்களுடன் இறந்துகிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சாம்பவா்வடகரை, பிரதான சாலையில் வசி... மேலும் பார்க்க

ஆனைகுளத்தில் அரசுப் பள்ளி ஆண்டு விழா

சுரண்டை அருகேயுள்ள ஆனைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, கடையநல்லூா் வட்டாரக் கல்வி அலுவலா் மகேஸ்வரி தலைமை வகித்தாா். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைய... மேலும் பார்க்க

ஆய்க்குடியில் பைக்குகள் மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் ஞாயிற்றுக்கிழமை 2 பைக்குகள் மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். செங்கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு. சுரேஷ் (27). அவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க