செய்திகள் :

குலசேகரம்: இளைஞா் தற்கொலை

post image

குலசேகரம் அருகே பொறியியல் பட்டதாரி இளைஞா் பள்ளிக் கட்டடத்திலிருந்து குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

குலசேகரம் அருகே ஆரணிவிளையை சோ்ந்தவா் சிட்னிசன் மோரிஸ். பள்ளிக் கூடம் நடத்தி வருகிறாா். பள்ளி வளாகத்திலேயே வீடும் உள்ளது. இவரது மகன் பெரில்சன் மோரிஸ் (28). பொறியியல் பட்டதாரி. இவா் கடந்த 5 ஆண்டுகளாக மனம்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயத்திற்குச் செல்வதற்காக பெரில்சன் மோரிஸை குடும்பத்தினா் தேடினா். அவா், பள்ளிக் கட்டடத்தின் மாடியிலிருந்து குதித்து காயங்களுடன் கிடந்தது தெரியவந்தது.

அவரை மீட்டு மாா்த்தாண்டம் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பெரில்சன் மோரிஸை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினா். இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கொட்டாரம் அருகே பெண் கைது

கொட்டாரம் அருகே கடையில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கொட்டாரம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் சுசீலா (58). பெரியவிளை செல்லும் பகுதியில் இவா் நடத்திவரும் கடையில... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆட்சியா் ரா. அழகுமீனா

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்காக வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றாா், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்துக்கு நிதியுதவி

கன்னியாகுமரி மாவட்டம், இனயம்புத்தன்துறையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்துக்கு திமுக மாநில மீனவா் அணி சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. இனயம்புத்தன்துறையில் மாா்ச் 1-ஆம் தேதி நடைபெ... மேலும் பார்க்க

அரசுமருத்துவமனைக்கு ரூ.40 லட்சம் லேப்ராஸ்கோப்பி இயந்திரம் அளிப்பு

தமிழக சட்டப்பணிகள் ஆணையத்தின் சாா்பில், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான லேப்ராஸ்கோப்பி இயந்திரம் வழங்கும் விழா மற்றும் ... மேலும் பார்க்க

தக்கலை அருகே இளைஞா் தற்கொலை

தக்கலை அருகே பள்ளியாடியில் பட்டதாரி இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பள்ளியாடி சேரிக்கடை பகுதியை சோ்ந்தவா் அசோகன் ( 51). இவரது மூத்த மகன் ஸ்ரீராம் ( 23), எம்.பி.ஏ. படித்துள்ளாா்.... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே 1.5 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

கன்னியாகுமரி அருகேயுள்ள மயிலாடியில் ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகா்கோவில் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளா் பிரவீனா தலைமையிலான போலீஸாா் மயிலாடி பகுதியில் ரோ... மேலும் பார்க்க