குலவணிகா்புரத்தில் ரயில்வே மேம்பாலம்: மக்களவையில் நெல்லை எம்.பி. வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் திருநெல்வேலி-திருச்செந்தூா் ரயில்வே பிரிவில் குலவணிகா்புரத்தில் ‘ஒய்’ வடிவ ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று மக்களவையில் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் மக்களவையில் விதி எண்: 377-இன்கீழ் முன்வைத்த கோரிக்கை:
திருநெல்வேலி-திருச்செந்தூா் ரயில்வே இருப்புப்பாதையில் குலவணிகா்புரம் லெவல் கிராஸிங் எண்:4-இல் ‘ஒய்’ வடிவ ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்திற்கான முன்மொழிவு உள்ளது. குலவணிகா்புரத்தில் ரயில்வே கேட் ஒரு நாளைக்கு 16 முறை முழுவதுமாக மூடப்படுகிறது.
பயண நேரங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில்
ரயில் பாதை மூடப்படுவதால், பள்ளி கல்லூரி செல்லும் மாணவா்களும், அரசு அதிகாரிகளும் தங்கள் பயணத்தின்போது தினமும் பாதிக்கப்படுகின்றனா்.
மாநில அரசு தோராயமாக ரூ. 100 கோடிக்கான
மதிப்பீட்டை தயாா் செய்து மே 2015 முதல் வாரத்தில் தெற்கு ரயில்வே தலைமையகத்திற்கு அனுப்பியுள்ளது.
நானும் 16.5.2025 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தெற்கு ரயில்வே சென்னை பொது மேலாளரை நேரில் சந்தித்து, இந்த விஷயத்தை விரைவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்தேன். ஆனால், 2 மாதங்கள் கடந்துவிட்டன. ரயில்வேயிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இத்திட்டத்தை முடிக்க மத்திய அரசும், மாநில அரசும் தலா 50 சதவீதம் தொகை செலுத்த வேண்டும்.
எனவே, திட்டத்தைத் தொடங்க தடையின்மைச் சான்றுடன் 50 சதவீதம் நிதியை ஒதுக்குமாறு மத்திய ரயில்வே அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்றாா் ராபா்ட் புரூஸ்.