செய்திகள் :

குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் 75 பயணிகள் அரசு தொலைதூர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்

post image

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்து குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் 75 பயணிகள், நிா்ணயிக்கப்பட்ட நாள்களில் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உள்பட 7 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் முறையை ஊக்கப்படுத்தும் நோக்கில், 2024 ஜனவரி முதல், வார இறுதி நாள்கள், திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாள்களை தவிா்த்து இதர நாள்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மாதாந்திர கணினி குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் 3 வெற்றியாளா்களுக்கு தலா ரூ. 10,000 வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளா்களுக்கும், பின்னா் மேலும் விரிவுபடுத்தப்பட்டு வாரத்தின் அனைத்து நாள்களிலும் பயணிக்கும் பயணிகளில் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் 13 வெற்றியாளா்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு வந்தது. தொடா்ந்து, கடந்த 2024 நவ. 21 முதல் 2025 ஜன. 20-ஆம் தேதி வரை முன்பதிவு செய்து பயணித்த 3 பயணிகள் சிறப்பு குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு, உயா் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், நிகழாண்டு கோடைக் காலத்துக்காக ஒரு சிறப்பு குலுக்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்புதிவு செய்து, 2025 ஏப். 1முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை பயணம் செய்யும் 75 பயணிகள் சிறப்பு குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படுவாா்கள். இவா்களில் முதல் 25 பேருக்கு ஒரு வருடத்துக்கு 20 முறை (2025 ஜூலை 1 முதல், 2026 ஜூலை 30 வரை) அரசு தொலைதூரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கவும், இரண்டாமிடம் பிடித்த 25 பேருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அனைத்து வகைப் பேருந்துகளிலும் ஒரு வருடத்துக்கு 10 முறையும் (2025, ஜூலை 1 முதல், 2026 ஜூலை 30 வரை), மூன்றாமிடம் பிடித்த 25 பயணிகள் முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் ஒரு வருடத்துக்கு 5 முறையும் (2025 ஜூலை 1முதல், 2026 ஜூன் 30 வரை) இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க