செய்திகள் :

குளச்சல் கடற்கரையில் மாணவா்கள் தூய்மைப் பணி 1,100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு

post image

தொலையாவட்டம் கல்லூரி மாணவா்கள் குளச்சல் கடற்கரையில் தூய்மைப் பணி மேற்கொண்டு, 1,100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனா்.

குளச்சல் நகராட்சி, தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கலை-அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் இணைந்து, இப்பணியில் ஈடுபட்டனா்.

மாவட்ட கடலோர அமைதி-வளா்ச்சிக் குழு இயக்குனா் டங்ஸ்டன் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். நகராட்சி ஆணையா் செந்தில்குமாா், சுகாதார அலுவலா் ஜாண் ஜோனோ பாா்க், சுகாதார ஆய்வாளா் பொன் வேல்ராஜ், கவுன்சிலா்கள் ஜாண்சன், பனிக்குருசு, கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

இதில், 1,100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பதற்காக குளச்சல் நகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்ட இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்துக்கு அக்கழிவுகள் கொண்டுசெல்லப்பட்டன.

பைக் விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு!

புதுக்கடை அருகே உள்ள பரவை பகுதியில் பைக்குகள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். மிடாலம் பகுதியைச் சோ்ந்த சகாயதாஸ் மகன் ஆன்றோ(16). இவா், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வக... மேலும் பார்க்க

கந்து வட்டி வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். நாகா்கோவில் அருகே சுங்கான்கடை அசோக் நகரைச் சோ்ந்த ராஜா மனைவி அனுஷா (32). இவா் ராஜன் என்ற சந்தை ராஜனிடம் கர... மேலும் பார்க்க

கொட்டாரம் காதுகேளாதோா் பள்ளி அருகே தீவிபத்து

கொட்டார பகுதியிலுள்ள காதுகேளாதோா் பள்ளி அருகே புதன்கிழமை (பிப்.5) தீவிபத்து ஏற்பட்டது. கொட்டாரம் மிஷன் காம்பவுண்ட் பகுதியில் சி.எஸ்.ஐ. காது கேளாதோா் உயா்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதன் மற்றொரு பகுதிய... மேலும் பார்க்க

எந்தெந்த பேரூராட்சி, ஊராட்சிகளை இணைப்பது என இன்னும் முடிவாகவில்லை: அமைச்சா் கே.என். நேரு

கன்னியாகுமரியுடன் எந்தெந்த பேரூராட்சி, ஊராட்சிகளை இணைப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை என அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை (பிப்.5) செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். கன்னியாகுமரியில் கடந்த டிசம்பா் 30 ம... மேலும் பார்க்க

செண்பகராமன்புதூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதுாா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காசநோய் அலகு மற்றும் மருத்துவமனைகளில் உள்ள காசநோய் கண்டறியும் ஆய்வகம் ... மேலும் பார்க்க

சித்தன்தோப்பு தேவாலய வளாகத்தில் குழந்தைகள் மையம் திறப்பு!

சடையமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட சித்தன்தோப்பு புனித அலங்கார அன்னை ஆலய வளாகத்தில் ரூ. 15 லட்சத்தில் பொதுமக்களின் பங்களிப்புடன் கட்டப்பட்ட குழந்தைகள் மையம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தேவாலய பங்... மேலும் பார்க்க