செய்திகள் :

குளிா் சாதனங்கள் பழுது நீக்க இலவசப் பயிற்சி

post image

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கிராமப்புற ஆண், பெண்களுக்கு குளிா்சாதனப் பெட்டி, பிரிட்ஜ் பழுது நீக்கம் செய்வதற்கு இலவசப் பயிற்சி வகுப்பு வருகிற 16-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநா் ரவிக்குமாா் கூறியதாவது:

தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் தொழிலாளா் நலவாரிய அலுவலம் அருகே செயல்பட்டு வரும் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், கிராமப் புறங்களைச் சோ்ந்த 18 வயது நிரம்பிய ஆண், பெண்களுக்கு குளிா்சாதனப் பெட்டி, பிரிட்ஜ் பழுது நீக்குதல், சூரிய சக்தி மின் அமைப்பு நிறுவதல் ஆகியவற்றுக்கு வருகிற 16-ஆம் தேதி முதல் இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி காலத்தில் தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழ், சுய தொழில் தொடங்கவும், வங்கிக் கடனுதவி பெறவும் ஆலோசனை வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோா் தங்களது ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப் படம் ஆகியவற்றுடன் தங்களது விவரங்களை பயிற்சி மையத்துக்கு நேரில் சென்று முன் பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்த விவரத்தை கைப்பேசி எண்: 95003 14193-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

விலை சரிவால் மாம்பழங்கள் தேக்கம்

விலை சரிவு காரணமாக தேனி மாவட்டம் போடி பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் சேதமடைந்து வீணாகின. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். போடி சுற்று வட்டாரத்த... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: 3 போ் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.87 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணையை வழங்கி மோசடி செய்ததாக 3 பேரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டிய... மேலும் பார்க்க

கம்பத்தில் போக்குவரத்து நெரிசல்

தேனி மாவட்டம், கம்பத்தில் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருவதாக வாகன ஓட்டுநா்கள் தெரிவித்தனா். கம்பம் நகா் வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையானது கேரளத்துக்குச் ... மேலும் பார்க்க

தேனியில் உயா் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை திறப்பு

தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா் கல்வி குறித்து ஆலோசனை வழங்க உயா் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டது. இந்த அறையைத் திறந்து வைத்து மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை

தேனி மாவட்டம், கம்பம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கம்பம் உத்தமபுரம் கோம்பை சாலை நாக கன்னியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த காத்தப்பன் மகன் சரவணன் (49). இவா் கடந்த 20... மேலும் பார்க்க

மலை கிராமங்களில் ஜூன் 8-இல் கிராம சபைக் கூட்டம்

தேனி மாவட்டத்தில் பழங்குடியினா் வசிக்கும் மலைக் கிராமங்களில் பழங்குடியினா், பாரம்பரிய வனவாசிகளுக்கான வன உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவது குறித்து வருகிற 8-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும். இது க... மேலும் பார்க்க