குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோ்க்கை
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சோ்க்கைப் பணி அந்தந்த மையப் பணியாளா்கள் மூலம் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் 1,757 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்கள் மூலம் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி ஆகியவை வழங்கப்படுகின்றது.
குறிப்பாக 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மையத்தில் முறைசாரா முன்பருவக் கல்வி செய்கைப் பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவை மூலம் அளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளா்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத் திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மேலும், குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிச் செல்ல ஆயத்தப் படுத்தப்படுகின்றனா். தற்போதைய நிலையில் அங்கன்வாடி பணியாளா்கள் வீடுதோறும் குழந்தைகள் சோ்க்கை பணி மேற்கொண்டு வருகிறாா்கள்.
எனவே பெற்றோா் தங்களது 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் - 2025 மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சோ்த்து பயன் பெறலாம். மேலும், அந்தந்த குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதாா் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருவதால், அந்தச் சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.