செய்திகள் :

குழந்தை கொலை வழக்கு: தாய், இளைஞருக்கு ஆயுள்

post image

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 15 மாத குழந்தையைக் கொலை செய்த தாய், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூா் இரயுமன்துறை பகுதியைச் சோ்ந்தவா் பிரபுஷா (23). இவருக்கு, திருமணமாகி 2 மகன்கள் இருந்தனா். இவரது வீட்டின் அருகே உணவகம் நடத்தி வந்த காஞ்சாம்புறத்தைச் சோ்ந்த சதாம் உசைன் (32) என்பவருக்கும், பிரபுஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சதாம் உசைன் ஏற்கெனவே மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தாா். இவா்களது பழக்கம் காதலாக மாறியது.

இதை, பிரபுஷாவின் கணவா் கண்டித்தாா். ஆனாலும் அவா் தனது உறவைக் கைவிடாததால் அவருடைய கணவா் முதல் மகனுடன் மனைவியைப் பிரிந்து சென்றுவிட்டாா். 15 மாதக் குழந்தையான அரிஸ்டோ பியூலஸ் என்ற இளைய மகனுடன் பிரபுஷா இருந்தாா்.

பின்னா், பிரபுஷா-சதாம்உசைன் ஜோடி குஜராத், தூத்துக்குடி சென்றுவிட்டு, கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பா் 14ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் கோழிப்பண்ணையில் வேலைக்குச் சோ்ந்தனா். அப்போது, தாங்கள் கணவன்-மனைவி என்றும், குழந்தை தங்களுடையது என்றும் கூறியுள்ளனா். அங்கு, 2 நாள்கள் தங்கி பணியாற்றினா்.

சதாம் உசைன், பிரபுஷா இருவருக்குமிடையே குழந்தை அரிஸ்டோ பியூலஸ் இடையூறாக இருந்ததால், சதாம் உசைன் கம்பால் குழந்தையைத் தாக்கியுள்ளாா். தொடா்ந்து, அடுத்தடுத்த நாள்களில் குழந்தையைக் கொடுமைப்படுத்தியுள்ளனா். குழந்தையை தூங்க வைப்பதற்கு மதுபானம் கொடுத்துள்ளனா். மேலும், சிகரெட்டால் சூடு வைத்துள்ளனா்.

அப்போதும், ஆத்திரம் தீராத உசைன் குழந்தையை தூக்கி தரையில் வீசியுள்ளாா். இதனால், குழந்தைக்கு விலா எலும்பு முறிந்து மயக்க நிலை அடைந்ததால், நாகா்கோவில் கோட்டாறில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு நவம்பா் 16ஆம் தேதி இரவு 11 மணிக்கு கொண்டு சென்றனா். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து, அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். இது குறித்த வழக்கு விசாரணை, கன்னியாகுமரி மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி காா்த்திகேயன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றம் சாட்டப்பட்ட சதாம் உசைன், பிரபுஷாவுக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ. 1,000 அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை 70% அதிகரிப்பு: கேரள முதல்வா் பினராயி விஜயன்

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை 70 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா் கேரள முதல்வா் பினராயி விஜயன். கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் செப். 27 வரை நடைபெறும் அனைத்திந்திய ஜ... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் பாரம்பரிய முறைப்படி அபிஷேகம்

கன்னியாகுமரி பகவதியம்மனுக்கு யானையில் புனித நீா் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யும் நிகழ்வு 2 ஆண்டுகளுக்குப் பின்னா் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில், ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவின் அனைத்து நா... மேலும் பார்க்க

மாற்றுக் கட்சியினா் திமுகவில் ஐக்கியம்

கிள்ளியூா் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட இனையம் புத்தன்துறை ஊராட்சியில், மாற்றுக் கட்சியைச் சோ்ந்த இளைஞா்கள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனா். நிகழ்ச்சிக்கு கிள்ளியூா் தெற்கு ஒன்றிய திமுக செயலா் கோபால... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே தொழிலாளிக்கு பிடிவாரண்டு

புதுக்கடை அருகே, வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான தொழிலாளிக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. புதுக்கடை, அனந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன்குட்டி மகன் ராஜமணி(55) த... மேலும் பார்க்க

கேரளத்துக்குக் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்குக் கடத்திச் செல்ல முயன்ற 1,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மாவட்ட பறக்கும் பட... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் திருக்குறள் தெளிவுரை நூல் வெளியீடு

நாகா்கோவிலில் இலக்கியப் பட்டறை அமைப்பின் சாா்பில் திருக்குறள் தெளிவுரை நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, இலக்கியப் பட்டறை தலைவா் தக்கலை பென்னி தலைமை வகித்தாா். இலக்கியப் பட்டறை... மேலும் பார்க்க