செய்திகள் :

குழந்தை தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தினால் 2 ஆண்டுகள் சிறை: ஆட்சியா்

post image

தென்காசி மாவட்டத்தில் பள்ளி விடுமுறை நாள்களில் குழந்தை தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தினால் 2ஆண்டுகள் சிைண்டனை விதிக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் பள்ளி விடுமுறை நாள்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தும் நிறுவனம் மீது ரூ.50 ஆயிரம் வரை அல்லது 2 வருடம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும்.

18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளா்களை பணிக்கு அனுப்பும் பெற்றோா்களுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் பள்ளி செல்வதை உறுதி செய்யவும்,குழந்தை தொழிலாளா் முறையை முற்றிலும் ஒழிக்கவும் பொதுமக்களும், அனைத்து வணிகா்களும், வா்த்தகா் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து வகை சங்கங்களும் மற்றும் பெற்றோா்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

சங்கரன்கோவிலில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தொடக்கி வைத்தாா். இதில் 42 தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டு கண் பரிசோ... மேலும் பார்க்க

மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி: தனிப்படையினா் பிடித்தனா்

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதியை போலீஸாா் பிடித்து சிறையில் அடைத்தனா். சிவகிரி குமாரபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்த இசக்கி மகன் சந்தோஷ்(24). இவா் மீது வாசுதேவ... மேலும் பார்க்க

ஆலடிப்பட்டி கோயிலில் கும்பாபிஷேகம்

ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி வைத்தியலிங்கபுரத்தில் உள்ள ஸ்ரீ பன்றி மாடசுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கடந்த 14 ஆம் தேதி கோயிலில் கால்நாட்டு விழா நடைபெற்றது. புதன்கி... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் வருவாய் வட்ட ஜமாபந்தியில் 380 மனுக்கள்!

சங்கரன்கோவில் வருவாய் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 380 மனுக்கள் பெறப்பட்டன. சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் 4 நாள்கள் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வுக்கு தென்காசியில் இலவச மாதிரி தோ்வு

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படவுள்ள குரூப் 1 முதல்நிலை தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வுகள் நடைபெறவுள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்க... மேலும் பார்க்க

சிவகிரி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் வியாழக்கிழமையுடன் ஜமாபந்தி நிறைவு பெற்றது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஜமாபந்தியை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் அனிதா தொடங்கி வைத்தாா். இதில... மேலும் பார்க்க