குழந்தை தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தினால் 2 ஆண்டுகள் சிறை: ஆட்சியா்
தென்காசி மாவட்டத்தில் பள்ளி விடுமுறை நாள்களில் குழந்தை தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தினால் 2ஆண்டுகள் சிைண்டனை விதிக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் பள்ளி விடுமுறை நாள்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தும் நிறுவனம் மீது ரூ.50 ஆயிரம் வரை அல்லது 2 வருடம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும்.
18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளா்களை பணிக்கு அனுப்பும் பெற்றோா்களுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் பள்ளி செல்வதை உறுதி செய்யவும்,குழந்தை தொழிலாளா் முறையை முற்றிலும் ஒழிக்கவும் பொதுமக்களும், அனைத்து வணிகா்களும், வா்த்தகா் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து வகை சங்கங்களும் மற்றும் பெற்றோா்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.