செய்திகள் :

குழந்தை பராமரிப்பு மையத்தின் சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி! குழந்தை உடல் முழுவதும் காயம்!

post image

நொய்டா: குழந்தை பராமரிப்பு மையத்தில் விடப்பட்ட குழந்தையை அதன் பராமரிப்பாளர் அடித்தும், தொடையில் கடித்தும், வலியால் குழந்தை கதறி அழும் விடியோ காட்டி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நொய்டாவில், வேலைக்குச் செல்லும் பெண், தன்னுடைய 15 மாதக் குழந்தையை பராமரிப்பு மையத்தில் விட்டுச் சென்றிருந்த நிலையில், பராமரிப்பாளரால் குழந்தை துன்புறுத்தும் காட்சிகள் வெளியாகியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அனைத்து கொடூரங்களையும் பார்த்துக் கொண்டு சும்மா இருந்ததாக குழந்தைகள் பராமரிப்பு மைய உரிமையாளர் மீதும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் வேலை செய்து வந்த சோனாலி மற்றும் உரிமையாளர் சாரு ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் முதல், தினமும் இரண்டு மணி நேரம் அந்தக் குழந்தை, பராமரிப்பு மையத்தில் விடப்பட்டு வந்துள்ளது.

அவ்வாறு, கடந்த வாரம், குழந்தை மிகவும் சோர்ந்து காணப்பட்ட நிலையில், வீட்டுக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது, தொடையில் பற்கள் தடம் இருந்துள்ளது. இதையடுத்து மருத்துவரிடம் சென்று காண்பித்தபோது, இது பெரியவர்களின் பல் தடம் என்பதை உறுதி செய்தார்.

குழந்தையின் தாய், பராமரிப்பு மையத்துக்குச் சென்று அங்கிருந்த சிசிடிவி பதிவுகளைப் பார்த்தபோதுதான், சோனாலி, குழந்தையை தொடர்ந்து அடிப்பது, தூக்கி தரையில் வீசுவது, பிளாஸ்டிக் மட்டையால் அடிப்பது, கடிப்பது போன்று துன்புறுத்தி வந்தது பதிவாகியிருந்தது.

இது குறித்து உரிமையாளரிடம் கேட்டபோது, அவரும் குழந்தையின் தாயை மிரட்டியிருக்கிறார். குழந்தை தொடர்ந்து அழுதபோதும் சாரு என்னவென்றுகூட கேட்காமல் இருந்திருப்பதாகவும் தாய் குற்றம்சாட்டியிருக்கிறார.

இது குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குழந்தைக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையம் செல்ல எம்.பி.க்களுக்கு சுதந்திரம் இல்லை: கே.சி. வேணுகோபால்

வாக்குத் திருட்டு மற்றும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகளை எதிர்த்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலர், எம்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவு: 9 தன்னார்வலர்கள் பலி!

பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த குடிநீர் கால்வாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 தன்னார்வலர்கள் உயிரிழந்தனர், மூன்று... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் ஒரு மணி நேரம் சிக்கித் தவித்த பயணிகள்!

ராய்ப்பூரில் ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் பயணிகள் ஒரு மணி நேரமாக சிக்கித் தவித்துள்ளனர். தலைநகர் தில்லியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ உள்பட சுமார் 160 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15... மேலும் பார்க்க

4 நகரங்கள் டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும்: ஒடிசா முதல்வர்!

புவனேஸ்வரைத் தவிர மேலும் நான்கு நகரங்களை டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும் என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி தெரிவித்தார்.கட்டாக், ரூர்கேலோ, சம்பல்பூர் மற்றும் பெர்ஹாம்பூருக்கு ஐடி மற்றும் மின்ன... மேலும் பார்க்க

ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது!

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில... மேலும் பார்க்க

ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு

ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் இருந்து பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வரில் உள்ள ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் திங்கள்கிழமை பாம்... மேலும் பார்க்க