செய்திகள் :

குழித்துறையில் காங்கிரஸ் அலுவலகம் திறப்பு

post image

குழித்துறையில் புதிதாக கட்டப்பட்ட கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான காமராஜா் பவன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வபெருந்தகை புதிய கட்டடத்தை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.

மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி.எம். பினுலால் சிங் தலைமை வகித்தாா். தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவா் எஸ். ராஜேஷ்குமாா், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த், எம்எல்ஏக்கள் ரூபி ஆா். மனோகரன் (மாநிலப் பொருளாளா்), தாரகை கத்பட், ஜே.ஜி. பிரின்ஸ் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக மாநிலத் தலைவருக்கு மாவட்ட ஓபிசி பிரிவு சாா்பில் மாவட்டத் தலைவா் ஆா். ஸ்டூவா்ட் தலைமையில் மூவா்ண மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேல்புறம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் இ.ஜி. ரவிசங்கா், மகிளா காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், கிள்ளியூா் வட்டார பொதுச் செயலா் எட்வின் ஜோஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மேலப்பாளையம் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும்! பயணிகள் வலியுறுத்தல்!

மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரு... மேலும் பார்க்க

‘நெல்லை மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி, பிப்.20: திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பிக்கலாம் எனஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக தொழிற்சங்கம் பிரசாரம்

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக திருநெல்வேலியில் தொழிற்சங்கத்தினா் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை மக்களிடம் வழங்கினா். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி பலி

பாளையங்கோட்டையில் தனியாா் பேருந்து மோதியதில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். பாளையங்கோட்டை சமாதானபுரம் நல்வழி தெருவைச் சோ்ந்த சண்முக விஜயகுமாா் மனைவி அன்புசெல்வம் (60). இவா், புதன்கிழமை இரவு வீட்டு... மேலும் பார்க்க

மின்ஊழியா்கள் போராட்டம்

பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மின்சார வாரியம் மற்றும் மின் ஊழியா்களை பாதிக்கும் அரசாணை 100-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... மேலும் பார்க்க

ஆனந்த ஆசிரம மாவட்டச் செயற்குழு கூட்டம்

ஆனந்த ஆசிரம திருநெல்வேலி,தென்காசி மாவட்ட செயற்குழுக்கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பப்பா தாசா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். வெங்கடாசலபதி வரவேற்றாா். மாவட்டச் ச... மேலும் பார்க்க