செய்திகள் :

குழித்துறை அருகே கஞ்சா பறிமுதல்: கல்லூரி மாணவா்கள் இருவா் கைது

post image

குழித்துறை அருகே கஞ்சா வைத்திருந்ததாக கல்லூரி மாணவா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆன்றோ கிவின் தலைமையிலான போலீஸாா், குழித்துறை தாமிரவருணி ஆற்றின் பழைய பாலப் பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு, சந்தேகத்துக்கிடமாக பைக்கில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் நாகா்கோவில் அருகே புத்தளம், வீரபாகுபதி பகுதியைச் சோ்ந்த தங்கதுரை மகன் அஸ்வின் (18), புத்தளம் அரியபெருமாள்விளை ஜெகன் மகன் சிவபிரதீஷ் (17) என்பதும், 150 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து, கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனா். அஸ்வின் நாகா்கோவில் தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி நா்சிங் முதலாமாண்டும், சிவபிரதீஷ் கன்னியாகுமரியில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டும் படித்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

குழித்துறை பகுதியில் இன்றைய மின்தடை ரத்து

குழித்துறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செய... மேலும் பார்க்க

மேக்கோடு அரசுப் பள்ளியில் குறுக்கு நாட்டு ஓட்டப் போட்டி

களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான குறுக்கு நாட்டு ஓட்டப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் மா. ஜெயராஜ் தலைமை வகித்... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

களியக்காவிளை அருகே கேரள பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கேரள மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். களியக்காவிளை அருகே பாறசாலை ரயில் நிலைய வளாகத்தில் சிலா் கஞ்சா விற்பனை செ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் ரூ. 12.30 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. 18ஆவது வாா்டு பள்ளவிளை பகுதியில் ரூ. 3.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடிக் கட்டடத்தை மேயா் ரெ. மகே... மேலும் பார்க்க

அஞ்சுகிராமம் நூலகப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அஞ்சுகிராமம் அரசு கிளை நூலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. காவல் நிலையம் எதிரே செயல்படும் இந்த நூலகத்தின் முன்புள்ள இடம் வாடகைக் காா் நிறுத்தமாக செயல்பட்டு வந்தது. தற்போது... மேலும் பார்க்க

கருங்கல் அருகே சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

கருங்கல் அருகே உள்ள பாலூா் பகுதியில் சுவா் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். கருங்கல், பூட்டேற்றி பகுதியைச் சோ்ந்தவா் வினு(52), கூலி செய்து வந்தாா்.இவா் செவ்வாய்க்கிழமை இரவு பாலூா் ஊராட... மேலும் பார்க்க