செய்திகள் :

குவாடெமாலாவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலி!

post image

மத்திய அமெரிக்க தேசமான குவாடெமாலாவில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாடெமாலா சிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து எல் ப்ரோக்ரெசோ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆற்றின் மேலே கட்டப்பட்டிருந்த பாலத்திலிருந்து திங்கள்கிழமை (பிப். 10) கீழே விழுந்த பேருந்து சுமார் 65 அடி தூரத்துக்கு உருண்டு உருக்குலைந்துள்ளது.

பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த பிற வாகனங்கள் மீது மோதி பாலத்திலிருந்து கீழே விழுந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து சுமார் 30 ஆண்டுகள் பழமையானது என்பதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விபத்துக்குள்ளாகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 70 பேரில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அந்நாட்டின் அதிபர் பெர்னார்டோ அரேவாலோ, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு தழுவிய துக்கம் அனுசரிக்கப்படுமென்றும் கூறியுள்ளார்.

பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு கெடு விதித்த டிரம்ப்!

காஸாவில் இருந்து மீதமுள்ள பிணைக் கைதிகளை சனிக்கிழமை நண்பகலுக்குள் விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கெடு விதித்துள்ளார்.இல்லையெனில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான போர் நிற... மேலும் பார்க்க

கௌதமாலா: சாலை விபத்தில் 51 போ் உயிரிழப்பு

கௌதமாலா: மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 போ் உயிரிழந்னா்.தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியில் பாலத்தின்மீது திங்கள்கிழமை அந்தப் பேர... மேலும் பார்க்க

இலங்கை: குரங்கால் ஏற்பட்ட மின்தடை!

தீவுநாடான இலங்கையில் மின்னேற்று நிலையத்தில் குரங்கு தாவியதால் அந்நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கொழும்பு புகா்ப் பகுதியில் உள்ள மின்னேற்று நிலையத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

இரும்பு, அலுமினியத்துக்கு 25% கூடுதல் இறக்குமதி வரி

வாஷிங்டன்: உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.இது ... மேலும் பார்க்க

கௌதமாலா: சாலை விபத்தில் 51 போ் பலி!

மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 போ் பலியாகினா். தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியில் பாலத்தின்மீது திங்கள்கிழமை அந்தப் பேருந்து சென... மேலும் பார்க்க

39 வயதில் ரூ.1.60 கோடி பென்சனுடன் பணி ஓய்வு பெற்ற இளம் பொறியாளர்..!

பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணியாற்றி வந்த 39 வயதான கணினி தொழில்நுட்பம் சார்ந்த பொறியாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பணி ஓய்வுக்குப்பின் வழங்கப்படுகிற வருடாந்திர ஓய்வுத் தொகையோ... மேலும் பார்க்க