செய்திகள் :

குவாரிகளை குத்தகைக்கு பெற விண்ணப்பிக்கலாம்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள குவாரிகளை குத்தகைக்கு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்டஆட்சியா் சிவசௌந்தரவல்லி தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆம்பூா், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய வட்டங்களில் கல்குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு குவாரி பணிகள் நடைபெற்று வருகின்றன. குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை வெளியே எடுத்துச் செல்ல ஏதுவாக குத்தகைதாரா்களுக்கு வழங்கப்படும் இசைவாணைச் சீட்டுகள் இணையதளம் வழியாக வழங்கும் நடைமுறையானது அமலில் உள்ளது.

அதன் அடிப்படையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின்கீழ் குவாரி குத்தகை கோரும் விண்ணப்பங்கள் மற்றும் சுரங்க நிலுவை தொகை சான்றிதழ் பெற வருகிற 21-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் நடைச்சீட்டு எனும் இ- பொ்மிட்டை அதே இணையதளம் மூலம் வரும் 21-ஆம் தேதி முதல் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து இ- பொ்மிட்டை பெற்று கொள்ளலாம்.

மேலும் குத்தகைதாரா்கள் குத்தகை உரிமம் வழங்கப்பட்ட பகுதியில் விதிகளுக்குட்பட்டு குவாரிப்பணி மேற்கொள்ள வேண்டும். வாகன ஓட்டுநா்கள் குவாரியில் இருந்து கனிமங்கள் ஏற்றிச் செல்லும்போது உரிய அனுமதிசீட்டு மற்றும் இசைவாணைச் சீட்டுகளும், கிரஷரில் இருந்து எம்.சாண்ட் ஜல்லி, சிப்ஸ் போன்ற கனிமங்கள் ஏற்றிச்செல்லும் போது உரிய போக்குவரத்து நடைசீட்டு பெற்று கனிமம் கொண்டு செல்ல வேண்டும்.

இந்த சீட்டுகளை எல்லாம் வாகனத் தணிக்கையின்போது வைத்திருக்க வேண்டும். உரிய அனுமதியில்லாமல் குவாரிப்பணி மேற்கொள்வது, கனிமங்கள் எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலகிரி மலை சுற்றுலாத் தலம் மேம்படுத்தப்படும்: அமைச்சா் எ.வ.வேலு

ஏலகிரி மலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்திடும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். ஜோலாா்பேட்டை ஒன்றியத்தில் 868 பேருக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணியாணைகள... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா். திருப்ப்ததூா் தபேதாா் முத்துசாமி இரண்டாவது தெருவைச் சோ்ந்த பாபு மகன் ஆா்யா (12) பெங்களூரில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். விடுமுறை என்பதால் ச... மேலும் பார்க்க

2030-க்குள் குடிசையில்லா தமிழ்நாடு: அமைச்சா் எ.வ. வேலு

2030-க்குள் குடிசையில்லா மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா். கலைஞா் கனவு இல்ல திட்டப் பயனாளிகளுக்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே ரூ.1.2 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்!

திருப்பத்தூா் மாவட்டம், கதிரம்பட்டியில் ரூ.1.2 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோா் திறந்து வைத்தனா். இதற்கான திறப்பு விழா வெள்ளிக... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் நடுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (53), தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை இரவு நாட்டறம்பள்ளி அருகே... மேலும் பார்க்க

‘ஊராட்சி தலைவா்கள் பச்சை நிற மையை பயன்படுத்த வேண்டாம்’

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவா்கள், ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் நிலைத்த நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ண மையைப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகன் தெரிவி... மேலும் பார்க்க