செய்திகள் :

குவாலியரில் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

post image

குவாலியரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. உடனே ஐசியுவில் இருந்து 13 பேர் உட்பட 190க்கும் மேற்பட்ட நோயாளிகள் மீட்கப்பட்டு வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்து குவாலியர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், அங்குள்ள மகளிர் மருத்துவப் பிரிவில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவின் (ICU) ஏர் கண்டிஷனரில் அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

மருத்துவமனையின் காவலர்கள் உடனடியாக ஜன்னல்களை உடைத்து ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை வெளியேற்றி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றினர். ஐசியு மற்றும் மருத்துவமனையின் பிற வார்டுகளில் உள்ள அனைத்து நோயாளிகளும் பாதுகாப்பாக உள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார். மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கமலா ராஜா மருத்துவமனையின் மகளிர் மருத்துவப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம்.

மருத்துவமனை காவலர்கள் மற்றும் வார்டு சிறுவர்கள் உடனடியாக நோயாளிகளை வெளியேற்றினர். பின்னர் குவாலியர் மாநகராட்சியின் தீயணைப்பு வீரர்கள் பின்னர் தீயைக் கட்டுப்படுத்தினர். ஐசியுவில் இருந்து 13 நோயாளிகளும், மருத்துவமனையின் பிற வார்டுகளில் இருந்து கிட்டத்தட்ட 180 நோயாளிகளும் வெளியேற்றப்பட்டு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோயாளியின் உதவியாளர் கூறுகையில், "தீ விபத்துக்குப் பிறகு மருத்துவமனை வளாகம் புகையால் நிரம்பியிருந்தது. அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக அனைத்து நோயாளிகளையும் மாற்றத் தொடங்கினர். அந்த நேரத்தில் எதுவும் தெரியவில்லை. தற்போது, ​​எங்கள் நோயாளி நலமாக உள்ளார், புதிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்." இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியா - சீனா போட்டி, மோதலாக மாறக் கூடாது: பிரதமர் மோடி

இந்தியா - சீனா இடையிலான போட்டி மோதலாக மாறக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் இயற்கையானவை என்றும், ஆனால், உலகின் நிலைத்தன்மைக்காக வலுவான கூட்டு ஒத்துழைப... மேலும் பார்க்க

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வணிக ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தடையற்ற வணிக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கும் நியூ... மேலும் பார்க்க

வளர்ச்சிப் பாதையில் வடகிழக்கு மாநிலங்கள்: அமித் ஷா

கிளர்ச்சி, வன்முறை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லப்பட்டுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.அஸ்ஸாம் மாநிலத்தின் க... மேலும் பார்க்க

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய உதவியது ஆர்.எஸ்.எஸ்: மோடி

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய ஆர்.எஸ்.எஸ். தனக்கு உதவியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். செய்யறிவு தொழில்நுட்ப ஆய்வாளர் லெக்ஸ் ஃபிரிட்மேன் உடனான நேர்காணலின்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏஐ குறித்த... மேலும் பார்க்க

கேதர்நாத் யாத்திரை: ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்குத் தடை விதிக்க பாஜக கோரிக்கை!

கேதர்நாத் யாத்திரை செல்பவர்களில் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு தடை விதிக்க பாஜக கோரிக்கை வைத்துள்ளது. கேதார்நாத் யாத்திரை தொடர்பான மேலாண்மை கூட்டம் இன்று நடைபெற்றது. கேதர்நாத் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக... மேலும் பார்க்க

மீரட்டில் பல்கலை.யின் திறந்தவெளியில் தொழுகை நடத்தியதாக மாணவர் கைது

மீரட்டில் உள்ள பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி வளாகத்தில் தொழுகை நடத்தியதாக மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் ஹோலி கொண்டாட்டங்களையொட்டி தனியார் பல்கலைக்கழக வளாகத்தில... மேலும் பார்க்க