செய்திகள் :

கூகுளில் ஹோட்டல் புக் செய்தபோது 93,000 ரூபாயை இழந்த இளம்பெண் - என்ன நடந்தது?

post image
இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் மோசடிகளால் பணத்தை இழப்பது மிகவும் எளிதாகிவிட்டது. சைபர் கிரைமில் ஈடுபடுபவர்கள் அசலை போன்று நகலை உருவாக்கி நம்ப வைத்து அதன்மூலம் பண மோசடி செய்கின்றனர்.

அப்படித்தான் கூகுள் பட்டியில் மூலம் ஹோட்டல் தங்குவதற்கு முன்பதிவு செய்த போது ஒரு பெண் ரூ.93 ஆயிரத்தை இழந்துள்ளார்.

சமீபத்தில் ஒரிசாவின் பூரியில் உள்ள ஒரு ஹோட்டலில் முன்பதிவு செய்தபோது இந்த ஆன்லைன் மோசடி நடந்துள்ளது.

ஹோட்டல் முன் பதிவு செய்வதற்காக 'Mayfair Heritage Puri’ எனத் தேடியபோது தோன்றிய முதல் லிங்கை க்ளிக் செய்துள்ளார். அதில் முன்பதிவு செய்வதற்கான செயல்முறையைத் தொடர்ந்துள்ளார், ஹோட்டல் தொடர்பான தகவலைக் கண்டறிந்த பிறகு அந்தப் பெண் அவர்களைத் தொடர்புகொண்டுள்ளார். தங்கும் அறை தொடர்பான படங்கள், தகவல்களை மின்னஞ்சல் மூலம் மோசடிக்காரர்கள் அந்தப் பெண்ணை நம்ப வைக்க அனுப்பியுள்ளனர்.

இதனை உண்மை என்று நம்பி முன்பதிவை உறுதிப்படுத்த ரூபாய் 93 ஆயிரத்து 600 ரூபாய் ஆன்லைன் மூலம் மாற்றியுள்ளார். அதன்பின்னர் அவருக்கு ஒரு போலியான இன்வாய்ஸ் கிடைத்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டபோது, அந்த அமைப்பு செயலிழந்துவிட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது.

மறுநாள் காலையில் மோசடி செய்பவரிடம் இருந்து மீண்டும் அழைப்பு வந்து கூகுள் பே செயலியை திறந்து அதில் ’பணம் செலுத்து’ என்பதை க்ளிக் செய்து வழங்கப்பட்ட முன்பதிவு ஐடியை உள்ளீடு செய்து உறுதிப்படுத்தலை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதில் ஏதோ தவறு இருப்பதை அந்தப் பெண் உணர்ந்து அதனைச் செய்ய மறுத்து மீண்டும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலைக் கேட்டுள்ளார்.

அதன் பின்னர்தான் அந்த மோசடிக்காரர் தான் பிடிப்பட்டதை உணர்ந்து உடனடியாகத் தொலைபேசியை துண்டித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அந்த ஹோட்டலின் அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்களை தேடி தொடர்புகொண்ட போது அவர் பயன்படுத்தியது போலியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவடி: "பங்குச் சந்தையில போட்டா..." - இன்ஜினீயரிடம் ரூ.1.5 கோடி மோசடி; போலீஸிடம் சிக்கியது எப்படி?

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (55). சிவில் இன்ஜினீயரான இவரின் வாட்ஸ்அப் நம்பருக்குப் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான லின்க் ஒன்று வந்தது. அந்த லிங்கை ஜெயராமன் ஓப்பன் செய்தபோது ... மேலும் பார்க்க

பள்ளியில் வைத்து பாலியல் வதைக்குள்ளான சிறுமி; சிக்கிய சிறுவர்கள்- விசாரணை வளையத்தில் திமுக நிர்வாகி!

சேலத்தில் 13 வயது சிறுமியைப் பள்ளி வளாகத்தில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறுவர்களை போக்சோ வழக்கில் போலீஸார் கைதுசெய்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட சிறுவர... மேலும் பார்க்க

மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்; குழம்பிய போலீஸ்... படம் வரைந்து காட்டிக்கொடுத்த மகள்!

உத்தரப்பிரதேசத்தில், மனைவியைக் கணவன் கொலைசெய்து நாடகமாடிய சம்பவத்தில், மகளால் உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தரப்பில் வெளியான தகவலின்படி, ஜான்சியில் கோட்வாலி பகு... மேலும் பார்க்க

Ragging: `அடித்து, முட்டி போட வைத்தனர்; எச்சி துப்பிய தண்ணீரை குடிக்க வைத்தனர்' -கேரள ராகிங் கொடுமை

கேரள மாநிலம் கோட்டயம் காந்தி நகரில் செயல்பட்டுவரும் அரசு நர்ஸிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடூரமாக ராகிங் செய்த சம்பவம் வெளியாகி அதிர்ச்ச... மேலும் பார்க்க

``சாராயமா, முன்பகையா'' -இரட்டை கொலை விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை! பின்னணி என்ன?

சாராய விற்பனையை தட்டி கேட்ட இளைஞர்கள்..மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தினேஷ் (28), ஹரிஷ் (25). இவர்களது நண்பர் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிசக்தி (20)... மேலும் பார்க்க

TNEB: `மின் இணைப்பு வழங்க ரூ.10,000 லஞ்சம்' -திருச்சியில் உதவியாளரோடு சிக்கிய உதவி செயற்பொறியாளர்

திருச்சி கே.கே.நகர் இந்திராகாந்தி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பேட்மிட்டன் விளையாட்டு மைதானத்திற்கு மும்முனை மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக, மின்சார வாரிய உதவி செயற்பொ... மேலும் பார்க்க