செய்திகள் :

கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்தால்.. இனி கட்டணம்! புதிய நடைமுறை!

post image

நாட்டில் பணப்புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை மத்திய அரசு ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட செயலிகள் பல. அவற்றில் கூகுள் பேவும் ஒன்று.

பொதுவாக டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்யக் கொண்டு வரப்பட்ட செயலிகளில் கூகுள் பேவுக்கு முதலிடம்தான்.

டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க செல்போன்களில் கூகுள் பே கொண்டுவரப்பட்டது. முதலில் சற்றுக் கடினமாக இருந்தாலும், கையில் எப்போதும் பணம் இருக்க வேண்டியதில்லை. எப்போதும் என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற வசதியால் கூகுள் பே மெல்ல, மக்களை தனது வலைக்குள் சிக்க வைத்தது.

ஒரு டீ குடித்துவிட்டு வெறும் 15 ரூபாயைக் கூட கூகுள் பே மூலம் கொடுக்கும் அளவுக்கு மாறிவிட்டது உலகம். என்ன இன்னும் பிச்சைக்காரர்கள் மட்டும்தான் கூகுள் பே வைத்து அதன் மூலம் பணம்பெறும் முறை நடைமுறைக்கு வரவில்லை. ஆனாலும் சில இடங்களில் அப்படியும் நடப்பது போன்ற விடியோக்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. உண்மையில் அப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த நிலையில், கூகுள் பே செயலி, தனது சேவையில் ஒரு சில மாற்றங்களை செய்துள்ளது. அதாவது யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்வதில், கூகுள் பே செயலி மூலம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வழியிலான பில் பேமெண்டுகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தனி நபர்களுக்கு இடையேயான பணப்பரிமாற்றத்துக்கு கட்டணம் எதுவும் கிடையாது. அது இலவசமாகவே தொடரும். ஆனால், அதே கூகுள் பேவில் ஒருவர் தனது டெபிட் அல்லது கிரெடிட் அட்டையைப் பயன்படுத்தி பில் பேமெண்டுகளை செய்யும் போது அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக ஒருவர் டெபிட் அல்லது கிரெட் அட்டையிலிருந்து மின் கட்டணம், எரிவாயு சிலிண்டர் கட்டணம் முதலியவற்றை செலுத்தினால் அதற்கு செயல்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு, பரிமாற்றம் செய்யப்படும் தொகையிலிருந்து 1 முதல் 5 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணத்துக்கு ஒருவர் டெபிட் கார்டு மூலமாக ஏதேனும் ஒரு கட்டணத்தை ரூ.1000 அளவுக்கு செலுத்தினால் அதற்கு ரூ.10 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஏற்கனவே, பல பணப்பரிமாற்ற செயலிகள் இந்த கட்டணங்களை வசூலித்து வரும் நிலையில், கூகுள் பேவும் தற்போது கட்டண வசூலிப்புக்குள் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின... மேலும் பார்க்க

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்தி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜ... மேலும் பார்க்க

ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப... மேலும் பார்க்க

விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண முக்கிய முடிவு: மத்திய வேளாண் துறை அமைச்சா்

‘விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்குத் தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்; எனவே, விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம்’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் ச... மேலும் பார்க்க