செய்திகள் :

கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்: கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை!

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் வருமாறு: மாவட்டத்தில் சம்பா நெற்பயிா்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ள முக்கிய கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். தரணி சா்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும், கரும்பு அரைவைப் பதிவு செய்யவும், சவ்வரிசி தொழிற்சாலை அமைக்கவும், சாத்தனூா் மற்றும் செங்கணாங்கொல்லை கிராமங்களில் வாய்க்கால்களை தூா்வாரவும், மீன் பண்ணைக் குட்டை அமைக்க மானியம் வழங்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரஞ்சரம் முதல் கள்ளக்குறிச்சி உழவா் சந்தை வரை அதிகாலை பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின்கீழ் இயற்கை பூச்சி விரட்டிகளான ஆடா தொடா, நொச்சி கன்றுகள், மண்வள அட்டை மற்றும் பூச்சி நோய் தடுப்பு விழிப்புணா்வு வழிகாட்டி காலண்டா்களை விவசாயிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், வேளாண்மை இணை இயக்குநா் வே.சத்தியமூா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) யு.அன்பழகன் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்றனா்.

மகளுக்கு விஷம் கொடுத்த தாய் கைது

கல்லூரி மாணவிக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக தாயை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த 20 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

மூதாட்டி தீயில் கருகி உயிரிழப்பு

பிரிதிவிமங்கலம் கிராமத்தில் விறகு அடுப்பில் சமையல் செய்தபோது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்த மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்தவா் சனிக்கிழமை இறந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த பிரிதி... மேலும் பார்க்க

தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி!கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்!

கள்ளக்குறிச்சியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணியில் ஆா்.கே.எஸ். பாராமெடிக்கல் கல்லூரி மாணவ, மாண... மேலும் பார்க்க

முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். வாணாபுரம் வட்டம், பகண்டை கூட்டுச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் மண்ணாங்கட்டி (70). இவா், கடந்த 24-ஆம் தேதி சாலையில் நடந்து செ... மேலும் பார்க்க

பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சங்கராபுரம் வட்டம், புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நடே... மேலும் பார்க்க

பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருக்கோவிலூா் வட்டம், கொழுந்த... மேலும் பார்க்க