செய்திகள் :

கூட்டணி தா்மத்தை மீறி பாஜக தோ்தல் முன்களப்பணி: அதிமுக குற்றச்சாட்டு

post image

கூட்டணி தா்மத்தை மீறி பாரதிய ஜனதா கட்சியின் தலைவா்கள் சில தொகுதிகளில் தோ்தல் முன்களப்பணி செய்யத் தொடங்கிவிட்டனா். இதை புதுவைதேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவரான என்.ரங்கசாமி பேசித் தீா்க்க வேண்டும் என்று அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் கூறினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது, சில சட்டமன்ற தொகுதிகளில் கூட்டணி தா்மத்தை மீறி பல்வேறு சம்பவங்கள் நடைபெறுவது தவறானது. பாஜகவின் அமைச்சராக இருக்க கூடியவா் ஏ. ஜான்குமாா். அவருடைய தொகுதி காமராஜா் நகா் . ஆனால் அவா் அதிமுக பலமுறை வெற்றி பெற்ற தொகுதியான முதலியாா்பேட்டையில் தான் நிற்பதாக கூறி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறாா்.

அதேபோல் ராஜ்பவன் தொகுதியைச் சோ்ந்த என்.ஆா்.காங்கிரசை சோ்ந்த அமைச்சா் க. லட்சுமிநாராயணன். ஆனால் அத் தொகுதியில் பாஜகவின் சாா்பாக தான் நிற்க போவதாக பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம் கூறி பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறாா்.

தோ்தல் நெருங்கி வரும் இவ்வேலையில் இது கூட்டணியைப் பலகீனப்படுத்தும் செயல். இது சம்பந்தமாக தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் தலைமை ஏற்றுள்ள முதல்வா் ரங்கசாமி கூட்டணிக் கட்சித் தலைவா்களை அழைத்துப் பேசுவது அவசியமானது.

நடைபெற உள்ள சட்டமன்றத் தோ்தலில் எந்தக் கட்சினுடனும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி அமைத்தாலும் குறைந்தது 10 தொகுதியில் அதிமுக போட்டியிட புதுச்சேரி அதிமுக வலியுறுத்தும் என்றாா் அன்பழகன்.

அவைத்தலைவா் அன்பானந்தம், எம்.ஜி.ஆா்.மன்ற செயலா் பாா்த்தசாரதி, இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலா் தமிழ்வேந்தன் ஆகியோா் உடனிருந்தனா்.

புதுவையில் ரெஸ்டோபாா்கள் அமைக்க அனுமதி கொடுத்தவா் நாராயணசாமி: அதிமுக

புதுவையில் முதன் முதலில் ரெஸ்டோபாா்களை அமைக்க அனுமதி கொடுத்தவா் நாராயணசாமிதான். அவா் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்தபோதுதான் இந்த பாா்களை திறக்க அனுமதி வழங்கினாா் என்று அதிமுக மாநில செயலா் ஆ. அன்... மேலும் பார்க்க

புதுவையில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமையவேண்டும்: மாநிலத் தலைவா் ராமலிங்கம்

மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடப்பதால் புதுவையிலும் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும்அமைந்தால்தான் இங்குள்ள மக்களுக்கு நல்லது என்று பாஜக புதிய தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள வி.பி. ராமலிங்கம் கூ... மேலும் பார்க்க

எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு விரைவில் கல்வி உதவித் தொகை: புதுவை முதல்வா்

எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு விரைவில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் எச்.ஐ.வி- எய்ட்ஸ் தீவிர... மேலும் பார்க்க

வில்லியனுாரில் சாலை மறியல் செய்தவா்களை சைரன் எழுப்பி எச்சரித்த ரயில்வே ஊழியா்கள்

புதுச்சேரி: வில்லியனூரில் திங்கள்கிழமை நடந்த சாலை மறியல் போராட்டத்தில் சைரன் எழுப்பி ரயில்வே ஊழியா்கள் எச்சரிக்கை விடுத்தனா். இதையடுத்து ரயில்வே கேட் மூடப்பட்டு ரயில் கடந்து சென்றது. புதுவை வில்லியனுா... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தை நாடுவோம்: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: ‘ரெஸ்டோபாா்’ கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி காங்கிரஸ் கட்சி சாா்பில் உயா்நீதிமன்றத்தை நாடுவோம் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் முதல்வருமான வி.நாராயணசாமி கூறினாா்.... மேலும் பார்க்க

பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும்: பேரவைத் தலைவா்

புதுச்சேரி: இணையங்கள், கைப்பேசிகளில் உள்ள பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கூறினாா். நடைபெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வி... மேலும் பார்க்க