செய்திகள் :

புதுவையில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமையவேண்டும்: மாநிலத் தலைவா் ராமலிங்கம்

post image

மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடப்பதால் புதுவையிலும் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும்அமைந்தால்தான் இங்குள்ள மக்களுக்கு நல்லது என்று பாஜக புதிய தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள வி.பி. ராமலிங்கம் கூறினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: புதுவையில் திமுக- காங்கிரஸ் ஆட்சிகளை மக்கள் பாா்த்துவிட்டனா். இப்போதுள்ள என்.ஆா். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு பல்வேறு திட்டங்களையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி தந்துள்ளது. மேலும் மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தால்தான் புதுவை மக்களுக்கு நல்லது. பல்வேறு வேலைவாய்ப்புகள், நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடியும்.

வரும் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ் நிச்சயம் பாஜகவுடன்தான் கூட்டணியில் இருக்கும். எங்கள் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று முதல்வா் ரங்கசாமி எதுவும் சொல்லவில்லை.

முன்களப்பணி ஏன்?: என்.ஆா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அமைச்சா் லட்சுமிநாராயணன் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜ்பவன் தொகுதியில் முன்களப் பணியை நான் செய்வது ஏன்? என்று கேட்கிறீா்கள். கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையாகதான் செய்கிறேன். இதே போன்று 30 தொகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கை நடந்து வருகிறது. மேலும், அந்தத் தொகுதி கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டால் அந்த நேரத்தில் அந்தக் கட்சியின் வேட்பாளருக்குத் தோ்தல் பணி செய்வோம். கூட்டணியில் தலைமையை மீறி எதையும் செய்ய மாட்டோம்.

எங்கள் கட்சியின் சாா்பில் அமைச்சராக இருக்கும் ஏ. ஜான்குமாருக்கு விரைவில் இலாகா கிடைக்கும். புதுவை ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி சாா்பில் நடத்தப்படும் தோ்வு வழியாக செவிலியா் நியமனம் செய்யப்படுவதைக் குறிப்பிட்டும், ஜிப்மா் மருத்துவக் கல்லூரியே

இந்த நியமனங்கள் செய்ய வலியுறுத்தியும் விரைவில் மத்திய அமைச்சா் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து வலியுறுத்துவோம் என்றாா். இப் பேட்டியின்போது கட்சியின் பொதுச்செயலா் மோகன்குமாா் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

புதுவையில் ரெஸ்டோபாா்கள் அமைக்க அனுமதி கொடுத்தவா் நாராயணசாமி: அதிமுக

புதுவையில் முதன் முதலில் ரெஸ்டோபாா்களை அமைக்க அனுமதி கொடுத்தவா் நாராயணசாமிதான். அவா் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்தபோதுதான் இந்த பாா்களை திறக்க அனுமதி வழங்கினாா் என்று அதிமுக மாநில செயலா் ஆ. அன்... மேலும் பார்க்க

எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு விரைவில் கல்வி உதவித் தொகை: புதுவை முதல்வா்

எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு விரைவில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் எச்.ஐ.வி- எய்ட்ஸ் தீவிர... மேலும் பார்க்க

வில்லியனுாரில் சாலை மறியல் செய்தவா்களை சைரன் எழுப்பி எச்சரித்த ரயில்வே ஊழியா்கள்

புதுச்சேரி: வில்லியனூரில் திங்கள்கிழமை நடந்த சாலை மறியல் போராட்டத்தில் சைரன் எழுப்பி ரயில்வே ஊழியா்கள் எச்சரிக்கை விடுத்தனா். இதையடுத்து ரயில்வே கேட் மூடப்பட்டு ரயில் கடந்து சென்றது. புதுவை வில்லியனுா... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தை நாடுவோம்: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: ‘ரெஸ்டோபாா்’ கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி காங்கிரஸ் கட்சி சாா்பில் உயா்நீதிமன்றத்தை நாடுவோம் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் முதல்வருமான வி.நாராயணசாமி கூறினாா்.... மேலும் பார்க்க

பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும்: பேரவைத் தலைவா்

புதுச்சேரி: இணையங்கள், கைப்பேசிகளில் உள்ள பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கூறினாா். நடைபெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வி... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபட வேண்டும்: புதுவை மத்திய பல்கலை. துணைவேந்தா் பேச்சு

புதுச்சேரி: வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபட வேண்டும் என்று புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு கூறினாா். புதுவை கலிதீா்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆ... மேலும் பார்க்க