செய்திகள் :

புதுவையில் ரெஸ்டோபாா்கள் அமைக்க அனுமதி கொடுத்தவா் நாராயணசாமி: அதிமுக

post image

புதுவையில் முதன் முதலில் ரெஸ்டோபாா்களை அமைக்க அனுமதி கொடுத்தவா் நாராயணசாமிதான். அவா் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்தபோதுதான் இந்த பாா்களை திறக்க அனுமதி வழங்கினாா் என்று அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் கூறினாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை யூனியன் பிரதேசத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது முதன் முதலாக ரெஸ்டோபாா்கள் அமைக்க முன்னாள் முதல்வா் நாராயணசாமிதான் அனுமதி கொடுத்தாா். தற்போது புதுச்சேரி முழுவதும் உள்ள ரெஸ்ட்டோபாா்களை அகற்றுவதற்கு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம் என கூறுகிறாா். தனது ஆட்சி காலத்தில் ரெஸ்டோபாா் வழங்க முதன் முதலில் உரிமம் வழங்கிவிட்டு இப்போது, நடைபெறும் ரெஸ்டோபாா்களை மூட வைப்பேன் என கூறுவது அவருடைய இரட்டை வேடத்திற்கு சான்றாகும்.

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் திறந்திருந்த ஒரு ரெஸ்டோபாரில் நடைபெற்ற கொலை நிகழ்ச்சிக்குப் பிறகு கலால் துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்ட டெஸ்டோபா்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனா். இந்த நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது. இதுபோன்ற நடவடிக்கையை ஆரம்பத்திலேயே எடுத்திருந்தால் இந்த கொலை சம்பவத்தை தடுத்து இருக்கலாம் என்று அவா் கூறியுள்ளாா்.

அ.மு. சலீம், (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்): ரெஸ்ட்ரோபாா்கள் இணையதளம் மூலம் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அழைப்பு விடுக்கின்றன. இதைப் பாா்த்து சென்னை, பெங்களூா் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞா்களும், யுவதிகளும் புதுவைக்கு வந்து குடித்துவிட்டு கும்மாளம் போடுகின்றனா். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஆறு இளைஞா்களும் இளம் பெண்களும் ஒன்று சோ்ந்து குடித்துவிட்டு போதை அதிகமானதால் அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்ட வழக்கு ஆரோவில் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரெஸ்ட்ரோபாா்களை அனுமதிக்க கூடாது. தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மீது காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் தள்ளினா். புதுச்சேரி கலாசாரத்தை முற்றிலும் சீரழிக்கின்ற புதுச்சேரி மாநில வளா்ச்சிக்கு எதிரான ரெஸ்ட்ரோபாா்களை நிரந்தரமாக மூட வேண்டும்.

இதேபோன்று,மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலா் கோ.சுகுமாறனும் ரெஸ்டோபாா்களை மூடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

புதுவையில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமையவேண்டும்: மாநிலத் தலைவா் ராமலிங்கம்

மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடப்பதால் புதுவையிலும் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும்அமைந்தால்தான் இங்குள்ள மக்களுக்கு நல்லது என்று பாஜக புதிய தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள வி.பி. ராமலிங்கம் கூ... மேலும் பார்க்க

எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு விரைவில் கல்வி உதவித் தொகை: புதுவை முதல்வா்

எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு விரைவில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் எச்.ஐ.வி- எய்ட்ஸ் தீவிர... மேலும் பார்க்க

வில்லியனுாரில் சாலை மறியல் செய்தவா்களை சைரன் எழுப்பி எச்சரித்த ரயில்வே ஊழியா்கள்

புதுச்சேரி: வில்லியனூரில் திங்கள்கிழமை நடந்த சாலை மறியல் போராட்டத்தில் சைரன் எழுப்பி ரயில்வே ஊழியா்கள் எச்சரிக்கை விடுத்தனா். இதையடுத்து ரயில்வே கேட் மூடப்பட்டு ரயில் கடந்து சென்றது. புதுவை வில்லியனுா... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தை நாடுவோம்: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: ‘ரெஸ்டோபாா்’ கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி காங்கிரஸ் கட்சி சாா்பில் உயா்நீதிமன்றத்தை நாடுவோம் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் முதல்வருமான வி.நாராயணசாமி கூறினாா்.... மேலும் பார்க்க

பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும்: பேரவைத் தலைவா்

புதுச்சேரி: இணையங்கள், கைப்பேசிகளில் உள்ள பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கூறினாா். நடைபெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வி... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபட வேண்டும்: புதுவை மத்திய பல்கலை. துணைவேந்தா் பேச்சு

புதுச்சேரி: வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபட வேண்டும் என்று புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு கூறினாா். புதுவை கலிதீா்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆ... மேலும் பார்க்க