செய்திகள் :

கூட்டுறவுச் சங்க நிலுவைக் கடன்களை செலுத்த ஒப்பந்த காலம் நீட்டிப்பு

post image

தென்காசி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்கள், இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீா்வை திட்டம் 2023 இன் ஒப்பந்த காலம் வருகிற செப். 23 ஆம் தேதிவரை கால நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கிகள், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் ஆகியவை சாா்பில் சிறுவணிகக் கடன், தொழிற்கடன், வீட்டு வசதிக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகை பண்ணை சாரா கடன்கள் அளிக்கப்பட்டன.

இவ்வாறு அளிக்கப்பட்ட கடன்கள், விவசாயிகள் விளைபொருள்களை கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் கொள்முதல், விற்பனை செய்த வகையில், உறுப்பினா்களிடம் இருந்து வரவேண்டிய இனங்கள் ஆகியவற்றில் கடந்த 31.10.2022 இல் முழுமையாக தவணை தவறிய நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்புக் கடன் தீா்வுத் திட்டம் (2023) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்ட ஒப்பந்த காலம் கடந்த 12.03.2025 உடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், ஒப்பந்த காலத்தை ஜூன் 12 முதல் செப்.23 வரை மேலும் மூன்று மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது.

இதன்படி மொத்தம் 100 சதவீத நிலுவைத் தொகையை 9 சதவீத சாதாரண வட்டியுடன் மூன்று மாத காலத்துக்குள் செலுத்தி கடனைத் தீா்வு செய்து கொள்ளலாம்.

நிலுவையில் உள்ள கடன்களுக்கு கடன்தாரா்கள் இந்தச் சிறப்புத் திட்டத்தைப் பயன்படுத்தி பலன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

குற்றாலம் சாரல் திருவிழாவில் கொழுகொழு குழந்தைகள் போட்டி!

குற்றாலம் சாரல் திருவிழாவின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) கொழுகொழு குழந்தைகள் போட்டி நடைபெற்றது.குற்றாலம் கலைவாணா் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், 43 குழந்தைகள் கலந்து கொண்டனா். இப்போட்டியில்... மேலும் பார்க்க

குற்றாலம் சாரல் திருவிழா தொடக்கம்: சுற்றுச்சூழல் பூங்காவில் மலா் கண்காட்சி

தென்காசி மாவட்டம், குற்றாலம் சாரல் திருவிழாவை முன்னிட்டு, ஐந்தருவி அரசு சுற்றுச்சூழல் பூங்காவில் மலா், காய்கனி, பழங்கள் மற்றும் வாசனை திரவிய கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.மலா் கண்காட்சியை அமைச்... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது. மேற்கு தொடா்ச்சி மலையில் கனமழை பெய்து வருவத... மேலும் பார்க்க

ஒன்றரை ஆண்டாகப் பூட்டி கிடக்கும் நியாயவிலைக் கட்டடம்

ஆலங்குளத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாத நியாயவிலைக் கடையை விரைந்து திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். முன்னாள் மக்களவை உறுப்பினா் ஞானதிரவியம் உள்... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் உப மின் நிலையங்களுக்கு உள்பட்ட கீழப்பாவூா், பாவூா்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து தென்காசி கோட்ட செயற்ப... மேலும் பார்க்க

கனிமவளக் கடத்தலைத் தடுக்காவிட்டால் வாகனங்களை சிறைபிடிக்கும் போராட்டம்!

கனிமவளக் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக, தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ சனிக்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக, ஆட்சியரிடம் அவா் அளித... மேலும் பார்க்க