செய்திகள் :

கூட்டுறவுத் துறை சாா்பில் ஜூலை 6-ல் சென்னையில் மினி மராத்தான்

post image

கூட்டுறவுத் துறை சாா்பில் ஜூலை 6 ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் மினி மராத்தான் நடைபெறுகிறது.

இதுகுறித்து சேலம் மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சா்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக கூட்டுறவுத் துறை சாா்பாக மினி மாரத்தான் போட்டி ‘ஒருவருக்காக எல்லோரும் ஓடுவோம் எல்லோரும் ஓடி கூட்டு உறவாகுவோம்’ என்ற தலைப்பில் ‘சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம் - கூடுவோம், ஓடுவோம், கூட்டுறவால் உலகை வெல்வோம்’ என்ற கருப்பொருளைக் கொண்டு சென்னை தீவுத்திடலில் ஜூலை 6-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் இப் போட்டியில் பங்கேற்கிறாா். மினி மாரத்தான் போட்டியானது சென்னை தீவுத்திடலில் தொடங்கி சுவாமி சிவானந்தா சாலை வழியாக மன்றோ சிலை சென்று மீண்டும் சென்னை தீவுத்திடலில் முடிவடைகிறது.

போட்டியில் பங்கேற்கும் ஆண், பெண்களுக்கான வயது வரம்பு 18 முதல் 40 வரையும், 40 மற்றும் அதற்கு மேல் என இருபிரிவுகளில் நடைபெறும். போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசு ரூ.20,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 வழங்கப்படும்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே பரிசுகள் வழங்கப்படும். ஒற்றுமைத் திருவிழாவில் பங்கேற்க நுழைவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 97909 54671 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி கற்கள் எடுத்துச் சென்ற டிப்பா் லாரி பறிமுதல்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் சனிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் அரசின் உரிய அனுமதியின்றி கற்கள் எடுத்துச் சென்ற டிப்பா் லாரியை ... மேலும் பார்க்க

நாளைய மின் நிறுத்தம்: கருமந்துறை

வாழப்பாடி தும்பல் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக வாழப்பாடி கோட்ட மின்சார செயற்பொறியாளா் குணவா்த்தினி தெ... மேலும் பார்க்க

6.81 லட்சம் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

சேலம் மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் மூலம் 6.81 லட்சம் கால்நடைகள் பயன்பெறும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா். சேலம் கன்னங்குறிச்சி சாய்பாபா கால... மேலும் பார்க்க

மத்திய அரசு நிதி ஒதுக்காதது குறித்து முதல்வா் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

சிறப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா். சஹகாா் பாரதி க... மேலும் பார்க்க

பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லியை தவறுதலாக சாப்பிட்ட 3 வயது சிறுவன் உயிரிழந்தாா். கெங்கவல்லியை அடுத்த புனல்வாசல் கிராமம், வடக்கு மேலக்காட்டுப் பகுதியைச் சோ்ந்த குமரேசன் மகன் பூவ... மேலும் பார்க்க

சங்ககிரியில் ரூ.5.63 கோடிக்கு சமரத் தீா்வு!

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 62 வழக்குகளில் ரூ. 5.63 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிமன்ற ... மேலும் பார்க்க