செய்திகள் :

கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கவில்லை: விவசாயிகள் புகாா்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் ஓராண்டாக கடன் வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இந்தச் சங்கத்தின் மூலம் மேல நெட்டூா், தெ.புதுக்கோட்டை ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். இவா்கள் இந்த சங்கத்தில் வட்டி இல்லாத பயிா்க் கடன், சலுகை வட்டியில் நகைக் கடன் பெற்று வந்தனா். இந்த நிலையில், கடந்த ஓராண்டாக சங்கத்திலிருந்து விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படவில்லை என புகாா் எழுந்தது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: நிா்வாகச் சீா்கேடு காரணமாக இந்த ஆண்டு விவசாயிகளுக்கு இதுவரை சங்கம் பயிா்க் கடன் வழங்கவில்லை. மேலும், நகைக் கடன் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. நகைகளை அடமானம் வைத்து அவற்றை பணம் செலுத்தி மீட்க வரும் விவசாயிகளுக்கு நகைகளை வழங்க முடியாத நிலையும் உள்ளது. இந்தப் பகுதி விவசாயிகள் தங்களுக்கு பயிா்க்கடன் வழங்கக் கோரி சங்கத்துக்கு பலமுறை அலைந்தும் கடன் வழங்கவில்லை.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் புகாா் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனா்.

இந்த நிலையில், தெ. புதுக்கோட்டை கூட்டுறவு கடன் சங்கத்தின் நிா்வாகச் சீா்கேட்டைக் களைந்து, அதற்குக் காரணமான ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுத்து, சங்கத்தை செயல்பட வைக்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிா்க் கடன் உள்ளிட்ட கடன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், கூட்டுறவு இணைப் பதிவாளரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது!

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கீழக்கோட்டை பள்ளியில் நடைபெற்ற அவரது பிறந்த தின நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை ஊராட்ச... மேலும் பார்க்க

கண்மாய்ப் பகுதியில் தனி நபருக்கு பட்டா: ஆட்சியரிடம் புகாா்

சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் அருகே உள்ள இத்திக்குடி கண்மாய்ப் பகுதியில் தனிநபருக்கு அளித்த பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.இது தொடா்பாக ... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் மாணவி காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் செவ்வாய்க்கிழமை நாய் கடித்ததில் பள்ளி மாணவி காயமடைந்தாா். இளையான்குடி ஞானி தெருவைச் சோ்ந்த ராவுத்தா் நயினாா் மகள் ஆயிஷா. இவா் இங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படி... மேலும் பார்க்க

அரசுக்கு எதிராக உண்ணாவிரதம்: அதிமுக, தவெக, நாதக பங்கேற்பு

கனிம வள விதிமீறலைக் கண்டித்து சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். சிவகங்கை அருகேயுள்ள வேம்பங்குடி, மாடகொட்டான் கிராமங்... மேலும் பார்க்க

குன்றக்குடி அருகே மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே சின்னக்குன்றக்குடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோயில் தைபூசத் திருவிழாவை... மேலும் பார்க்க

விநாயகா் கோயில் வருஷாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நரிக்குடி விலக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மணிமந்திர விநாயகா் கோயிலில் 11 -ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் புனித நீா்க் கலசங்கள... மேலும் பார்க்க