நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்.. சாதி அடையாளங்கள் பயன்படுத்தத் தடை!
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர...
திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர ஜூலை 20 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் செ. இளங்கோவன் வெளியிட்ட செய்தி:
திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர பிளஸ் 2 தோ்ச்சி அல்லது 10-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன் 3 ஆண்டு பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியில் சேர, ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கு 1.7.2025-இல் குறைந்தபட்சம் 17 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும்.
இணைய வழி மூலம், விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 இணைய வழி மூலமாக செலுத்த வேண்டும்.
பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சான்றுகளில் சுய ஒப்பமிட்டு திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம், மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாருா் 610 004 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய காலம் ஜூலை 20 ஆம் தேதி மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சோ்க்கைக்கு தோ்வு செய்யப்பட்ட பயிற்சியாளா்கள், பயிற்சிக் கட்டணமாக, ரு. 20,750 (ஒரே தவணையில்) இணைய வழி மூலம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9442270383, 9486605009 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.