செய்திகள் :

கூட்ட நெரிசலில் பலியான துயரச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்! - டி.கே.சிவக்குமார்

post image

ஆர்சிபியின் வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலியான துயரச் சம்பவத்திற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி கோப்பை வென்றதால், வெற்றிக் கொண்டாட்டங்கள் மற்றும் செய்யப்பட்டு பேருந்து பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, மாலை 5 மணியளவில் கர்நாடக சட்டப் பேரவையிலிருந்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார், ஆளுநர் தலைமையில் சின்னசாமி திடல் வரை அணிவகுப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், ரசிகர்கள் ஆரவரத்தில் ஈடுபட்டு கூட்டம் கூட்டமாக குவியத் தொடங்கினர்.

இதனால், காவல் துறையினர் கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த லேசான தடியடியிலும் ஈடுபட்டனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கியதில் ஒரு பெண் உள்பட 10 பேர் பலியாகியுள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஆளும் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பற்ற தன்மையே இந்த பலிக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சின்னசாமி திடலில் கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற இருந்த நிலையில் , பெங்களூரு அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கூட்ட நெரிசல் ஏற்படும் என்றுதான் திறந்தவெளி வாகனப் பேரணியை ரத்து செய்தோம்.

5,000 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஆர்சிபி வெற்றிப் பேரணி: கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி!

பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஜூன் 20ல் ஒடிசா செல்கிறார் பிரதமர்!

பாஜக அரசின் முதலாமாண்டு விழாவிற்கான மாபெரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜூன் 20ல் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா செல்லவுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சியின் ... மேலும் பார்க்க

கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தேஜஸ்வி யாதவ்!

பிகாரின் வைஷாலி மாவட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் வந்த கார் விபத்தில் சிக்கியதில் பாதுகாப்புப் பணியாளர்கள் மூவர் காயமடைந்தனர். ஆனால் தேஜஸ்வி யாதவ் காயமின்றி உயிர்த் தப்பினார். இதுதொடர்பாக ம... மேலும் பார்க்க

தேர்தல் மோசடிக்கான வரைபடம் மகாராஷ்டிரம்.. அடுத்து பிகார்தான்: ராகுல்

கடந்த 2024ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மோசடி செய்ததாகவும், அடுத்து பிகார்தான் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் ... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்போம்! அமெரிக்கா உறுதி

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டைத் தெரிவிக்க அமெரிக்காவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழு சென்றுள்ளது. அமெரிக்காவின் நாடாளுமன்ற குழுவிடம் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெரிவித்தபின், ... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்! செய்திகள் - நேரலை!!

தங்கம் விலை குறைந்தது!! சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1200 குறைந்துள்ளதால், தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க..கிருஷ்ணகிரியில் பக்ரீத் திருநாள் கிருஷ்ணகிரியில் ப... மேலும் பார்க்க

நாட்டில் கரோனா பாதிப்பு 6,000-ஐ நெருங்குகிறது!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 391 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை ஆக உள்ளது.மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் எ... மேலும் பார்க்க